Sunday 18 August 2013

insects

வாழும் இடத்தின் அமைப்பு மற்றும் நிறத்திற்கு தகுந்தார் போல் தன் உடலை தகவமைத்துக்கொண்டு  மறைத்து கொள்ளும் பூச்சிகளை பார்க்க நேர்ந்தது. அதில் சில க்ளிக்குகள்







Tuesday 6 August 2013

காதல்...

காதல் மிக அழகான சொல். இக்காதல் இலக்கியங்கள் முதல் தற்போது சினிமா வரை எவ்வளவு அழகாக சொல்ல முடியுமோ, அவ்வளவு அழகாகவும் நேர்த்தியாகவும் சொல்லியிருக்கிறார்கள். இதை பற்றி நினைக்கும் போதே அனைவருக்கும் உள்ளம் குதுகலிக்கும். மேலும் காதலை சுவாசிக்காதவர்கள் இவ்வுலகில் இல்லையென சொல்லலாம். ஏதோ ஒரு காலகட்டத்தில நாம் அனைவருக்கும், இந்த அனுபவம் எற்பட்டு இருக்கும். நமக்கு சரியென பட்ட ஒன்று பெற்றோராக நாம் மாறும் போது தான், அதில் உள்ள அபத்தங்களும் தவறுகளும் தெரிகிறது. தெரிவது மட்டுமல்ல மிக பெரிய கவலையையும் தருகிறது. காதல் என்பது காமத்தின் வெளிப்பாடு என இளவயதில் யாரும் அறிவதில்லை. காதல் புனிதமானது, தெய்விகமானது என்பதெல்லாம் இலக்கியத்திற்கு மட்டுமே பொருந்தும் என்பதை காதலிப்பர்கள் அறிவதில்லை.

என்னுடைய கல்லூரி நாட்களில் காதலிப்பவர்களை பார்த்து எனக்கும் காதலிக்க வேண்டும் என்ற எண்ணம் எற்பட்டதுண்டு (நல்லவேளை அப்போது எனக்கு எந்த காதலியும் கிடைக்கவில்லை).  பின்னாளில் படிப்பு வேலையென அலைந்த போது எனக்கு அந்த எண்ணம் இல்லாமல் போனது (எனக்கு காதலி கிடைக்கவில்லை என்று வருத்தப்பட்ட நாட்களும் உண்டு). அந்த நாட்களில் நான் நினைத்ததை இப்போது எண்ணி பார்க்கும் போது சிரிப்புதான் வருகிறது. 14 முதல் 21 (இது ஒரு தோராயமான கணக்கு தான் அவர் அவர் அனுபவத்திற்கு எற்ப்ப மாறுபடும்) வயது வரை ஒரு குழப்பமான காலகட்டம் என்ற உண்மையை இப்போது தான் என்னால் உணர முடிகிறது. 14 முதல் 21 வயது வரை உள்ள தங்கள் குழந்தை சில சமயம் தடம் மாறி காதல் வலையில் விழும்போது சில பெற்றோர்கள் சாதுர்யமாக அவர்களை அதில இருந்து மீட்கிறார்கள். ஆனால் எல்லா பெற்றோராலும் அது முடிவதில்லை. இப்படி தடம் மாறி காதலில் விழும் தம் குழந்தைகளை மீட்க முடியாமல் தவித்து இதனால் எற்படும் கவலையாலும் மனஉளைச்சலாலும் சிலர் தற்கொலை செய்துகொள்கிறார்கள் (காதலர்களும் தான்). சில இழப்புகளுக்கு பின் தான் தன்னுடைய தவறையே காதலிப்பவர்கள் உணர்கிறார்கள். காதல் இலக்கியத்திலும் சினிமாவிலும் இருப்பது போல் நிஜவாழ்க்கையிலும் இருக்கும் என நினைப்பது எவ்வளவு முட்டாள் தனமானது என்று அவர்கள் உணரும் போது காலம் கடந்துவிட்டுருக்கும்.

ஓரு எ.கா .. எனது நண்பர்களில் ஒருவன் ஒரு பெண்ணை காதலித்துகொண்டிருந்தான். அப்போது அவளை பற்றி சொல்லும் போது அவளுக்கு முற்றிலுமாக சமைக்க தெரியாது எனவும் காய்கறி கூட அறுக்க தெரியாது எனவும் வேடிக்கையாக சொன்னான். அவனுக்கு அப்போது அது ஒரு அற்ப்ப விசயமாகபட்டது. பின்னாளில் அவளை திருமணம் செய்த பின் சரியாக சமைக்க தெரியவில்லையென திட்டிக்கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் அவளை அடிக்கவும் செய்தான். அவளுக்கு சமைக்க தெரியாது என நன்கு தெரிந்து தான் திருமணம் செய்துகொண்டான். காதலிக்கும் போது இருந்த சகிப்பு தன்மை கல்யாணம் ஆன பின் அவனிடம் அது முற்றிலுமாக இல்லை. இது தான் எதார்த்த உண்மை. இதை காதலிப்பவர்கள் அனைவரும் உணர வேண்டும்

இதில் பெண்களும் விதிவிலக்கல்ல.. இதற்கு ஒரு எ.கா நான் படித்ததை சொல்கிறேன். ஒரு பெண் கல்லுரியில் பேராசிரையாக பணிபுரிகிறாள் அவள் பள்ளியில் படிக்கும் போது தன் வீட்டின் அருகில் உள்ள ஒருவருடன் காதல்.  அந்த நபர் 8வது மட்டும் படித்தவர் சொந்த தொழில் செய்பவர். ஒருகாலகட்டத்தில் வீட்டின் எதிர்ப்பை மீறி அவரை கல்யாணம் செய்துகொண்டாள். கல்யாணம் செய்துகொண்ட பின் அவர் மீது அடுக்கடுக்கான குற்றசாட்டை வைத்தாள். சரியாக பேச தெரியவில்லை, உடை உடுத்த தெரியவில்லை, பொது அறிவில்லை, இங்கிதமாக நடக்க தெரியவில்லை என பல.. இது எல்லாம் முன்பே அவளுக்கு தெரியும் ஆனால் இப்போது இதை சகித்துகொள்ள அவளால் முடியவில்லை. அதன் பின் அந்த உறவு எப்படி முடிந்திருக்கும் என சொல்ல தேவையில்லை.

வாழ்க்கையை பற்றிய புரிதல் இல்லாமல் இனகவர்ச்சியில் காதலித்து கல்யாணம் செய்துகொண்டால் அதனால் துன்பம் மட்டும் தான் மிஞ்சும் என்பதை இவர்கள் அறிவதில்லை. 

நான் மேல் சொன்ன அனைவரும் நன்கு படித்து மற்றும் பொருளாதரத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர்கள். இவர்கள் காதலே இப்படி இருக்கும் போது இளம் வயதில் காதலித்து பெற்றோரை எதிர்த்து கல்யாணம் செய்துகொண்டவர்களின் நிலை எப்படி இருக்கம் என யோசித்து பாருங்கள்.

நான் 10வது படிக்கும் போது இருந்த காலத்தில் ஒரு பெண்ணை சற்று முறைத்து பார்த்தால் கூட  மறுநாள் தந்தையை கூட்டிவந்துவிடிவாள் ஆனால் இன்று பெற்றோருக்கு தெரியாமல் காதலித்து அவனுடன் ஒடிச்சென்றுவிடுகிறாள். இந்த அளவுக்கு காலம் மாறியது எனக்கு ஆச்சர்யத்தை அளிக்கிறது. இதற்கு அநேகமாக சினிமாவும் மேலைநாட்டு கலாச்சாரமும் ஒரு காரணம் என சொல்கிறார்கள்.

சினிமாவை நாம் தவிர்க்க முடியாது, அது மனமகிழ்ச்சிக்கான அஃதின பொருள் என உணர்ந்து, சினிமாவை சினிமாவாக பார்க்க பழகிக்கொள்ள வேண்டும். அதை நிஜவாழ்க்கையோடு இணைத்து குழப்பிக்கொள்ள கூடாது. 

மேலைநாட்டில் ஒரு பெண், சிறு வயதில் காதலித்து குழந்தை பெற்றுக்கொண்டு, அதன் பின் கல்யாணம் செய்து வாழும்போது, அந்த வாழ்வில் விரிசல் விழுந்து அவர்கள் பிரிந்தாலும் அந்த பெண்ணுக்கு உடனடியாக வேறு காதலன் கிடைப்பதுடன் அந்த குழந்தைக்கு தந்தையும் கிடைத்துவிடுகிறது. அதுயெல்லாம் அவர்களுக்கு சர்வ சாதாரணம். மேலும் பெண்ணின் பெற்றோரும் அவளை புறகணிப்பதில்லை.. இதையெழுதும் போது ஒரு கைபேசியில் வந்த நகைச்சுவை குறுச்செய்தி எனக்கு நினைவுக்கு வருகிறது.

மேலைநாட்டின் தம்பதியர்கள் பேசிகொள்கிறார்கள்.
மனைவி கணவனிடம்: "அங்கு என்ன சத்தம் டியர்"
கணவன்: "ஒன்னுமில்ல டியர்".... "என்னுடைய குழந்தையும், உன்னுடைய       குழந்தையும், சேர்ந்து நம்முடைய குழந்தையிடம் சண்டை போடுகிறார்கள்"... என சொன்னான.

இது நகைச்சுவையாக இருந்தாலும் உண்மை நிலையும் இதுவே. மேலும் அங்குள்ள அரசாங்கமும் குழந்தைகளுக்கு பல சலுகைகளை தருகிறது என்பதையும் எண்ணி பார்க்க வேண்டும். ஆனால் இங்கு நிலைமை வேறு மாதிரியாக இருக்கிறது

இதனால் நான் யாரையும் காதலிக்க கூடாது என சொல்லவில்லை. இளம்வயதில் கண்டிப்பாக காதலிக்க கூடாது என்பது தான் என் கருத்து. 21 வயதிற்கு மேல் தான் ஒருவித அனுபவம் கிடைத்திருக்கும் அதன் பின் எடுக்கும் முடிவு சரியாக இருக்க வாய்ப்புள்ளது. (கவனிக்கவும் வாய்ப்புள்ளது எனதான் சொல்லியுள்ளேன்).
 
என்னை பொருத்தவரை பெண்கள் காதலிப்பதற்க்கு முன் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும். நன்கு படித்து தனக்கான நல்ல வேலையை தேர்ந்தெடுத்துகொண்டு பொருளாதரத்தில் உயர்ந்த பின்தான் காதலை பற்றியே அவள் சிந்திக்கவேண்டும். தன்னை வளர்த்த பெற்றோருக்கு ஒன்றும் செய்யவில்லையென்றாலும் பரவாயில்லை, ஆனால் அவர்களுக்கு துன்பத்தை மட்டும் கட்டாயம் கொடுக்க கூடாது என்ற எண்ணம் ஒவ்வொரு பெண்ணிற்க்கும் இருக்க வேண்டும்.

மேலும் சில வெளிப்படையான உண்மையை பெண் அறிய வேண்டும். 
ஒருவன் பல பெண்களை காதலித்தால் அவனை கண்ணன் மற்றும் மன்மதன் என அழைக்கும் நம்மவர்கள். ஏதோ ஒரு அறியாமையால் தவறு செய்த பெண்ணை என்ன சொல்லி அழைப்பார்கள் என எண்ணி பார்க்க வேண்டும். மேலும் இவர்கள் கணவனை இழந்த அல்லது விவாகரத்து ஆன பெண்களை திருமணம் செய்துகொள்ள மாட்டார்கள். ( அப்படி திருமணம் செய்துகொள்பவர்கள் எற்கனவே திருமணம் ஆனவர்களாக தான் இருப்பார்கள். சில சமயம் இவர்களும் திருமணம் ஆகாத ஏழை பெண்களை திருமணம் செய்யவே முயற்ச்சி செய்கிறார்கள். ஒருவேளை கிடைக்கவில்லையெனில் தான் மற்றவர்கள்.)

இதையெல்லாம் அறியாமல் பெண்கள் சிறுவயதிலே காதல் வலையில் சிக்கினால் துன்பம் என்னவோ இவர்களுக்கு தான் எனபதை இவர்கள் நன்கு உணர வேண்டும். இப்போது அன்பாக இருக்கும் காதலன் பிற்காலத்தில் மாற வாய்ப்பு மிக மிக அதிகம் என்ற எதார்த்த உண்மையை அறிந்து தன்னை தற்காத்துக்கொள்ள வேண்டும்.

நான் பார்த்த ஒரு சகோதரியை பற்றி சொல்லி இப்பதிவை முடிக்கிறேன். என் வீட்டின் அருகில் குடியிருந்த அந்த சகோதரியின் பெற்றோர் நடுத்தர குடுப்பத்தை சேர்ந்தவர்கள். தன் தந்தையின் நிலையை நன்கு உணர்ந்த அவள் தன்னுடைய கடின உழைப்பாள் நன்கு படித்து ஒரு வேலையை தேர்ந்தெடுத்து தனது கல்யாணத்திற்கும் குடுபத்திற்கும் தேவையான பணத்தை அவள் சேர்ந்து வைத்தால். எனக்கு தெரிந்து பல கண்ணன்களும் மன்மதன்களும் பலநாள் பல அம்புகள் விட்டும் அவள் மனதை கலைக்கமுடியவில்லை.  அவளுக்கு என்று இருந்த தனித்தன்மையை அவள் இழக்க விரும்பவில்லை. பின் தனது கல்யாணம் முடிவான போது அவள் தந்தையே ஆச்சர்யப்படும் அளவுக்கு ஒரு தொகையை கொடுத்தால். மேலும் வரப்போகும் கணவனிடம் எவ்வாறு வாழ்க்கையை அமைத்துகொள்ள வேண்டும் என்ற மனபக்குவமும் அவளிடம் இருந்தது. இதை போன்று மனபக்குவமுள்ள பெண்களை பெற்ற பெற்றோர்கள் அதிர்ஷ்டசாலிகள் தான்... வேறு என்ன சொல்ல.....


கடல் காற்று வீசும்.....

Wednesday 24 July 2013

குட்டி தேவதை - கவிதை


அழகிற்கே அழகு சேர்க்கும் இரண்டு
வயது குட்டி தேவதை என் தங்கை...

சின்னச்சிறு கைகளால் என்னை 
அடிக்கும் போதும்
என் புத்தகங்களை கலைக்கும் போதும்
எனக்கு கோபமே எற்பட்டதில்லை...

அப்பாவின் அயர்ன் செய்த சட்டையை 
கலைக்கும் போதும்
அவர் கைபேசியில் விளையாடும் போதும்
அப்பாவின் கோபம் அம்மாவிடம்...

பூஜையறையில் கட்டுப்பாடு 
எனக்கு மட்டுமே...!

மழலை குரலில் அவள் பாடும் கானம்
வீடெங்கும் எதிரொலிக்கும்...

அவளின் ஒவ்வொரு அசைவையும் 
பார்த்து பார்த்து
மகிழ்ந்தோம் நித்தம் நித்தம்...

ஒவ்வொரு முறையும் பள்ளிவிட்டு 
வரும் போது
மகிழ்ச்சி பொங்க ஒடிவந்து
கட்டி அணைப்பாள்...

ஒடிபிடித்து, மறைந்து நின்று, பூச்சாண்டி காட்டி
விளையாடியது அனைத்தும் 
நின்றது ஒரு நாள்...

காய்ச்சலில் அவள் விழும் போது
லேசான காய்ச்சல் என நினைத்தோம்...

ஆனால் காய்ச்சல் நிற்காததால்
செய்வதறியாமல் தவித்தோம்...

உற்றார் உறவினர், நண்பர்களின் பரிந்துரையில்
டாக்டர்கள் மாறினார்கள் ஆனால்
காய்ச்சல் மறையவில்லை...

ஊசிகளும், மாத்திரை, மருந்துகளும்
அவளை நிலைகுலைய செய்து
நிறம் மாற செய்தன...

முருகன், சிவன், ஐயப்பன் என
அனைத்து கோயிலுக்கும் சென்று வேண்டி
தீறுநீரு பூசுகிறால் அம்மா...

பீட்டர் அண்ணாவுடன் சர்ச்சில்
பிரார்த்தனையும்...
பானு அக்காவுடன் தர்காவில் தாயித்தும்...
கட்டி வேண்டிக்கொண்டார்கள்...
அவளை மீட்டெடுக்க...

அனைத்து கடவுளிடமும் உள்ளம்
உருகி வேண்டிக்கொண்டும்
காய்ச்சலின் வீரியம் மட்டும்
குறையவில்லை...

இரவில் அவளின் வலியின் முனங்கல்கள்
என் உயிரை உறைய செய்தது...

காது பொத்தி தலையணையில் முகம் 
புதைத்தேன் கேட்க முடியாமல்...

ஒருநாள்...
பள்ளியிலிருந்து என்னை 
அழைக்க வந்தார் பீட்டர் அண்ணா...
வீட்டிற்கு வருமுன்னே சோகம் 
என்னை கவ்வியது...

உள்நுழைந்து அன்னையிடம் 
செல்லும் போது...

முகம் மட்டும் தெரிய துணியால்
சுற்றப்பட்டு விட்டின் நடுவில்
கிடத்தப்பட்டு இருக்கின்றாள் என் தங்கை...

புத்தகப்பையை கழட்டும் முன்பே 
கட்டியணைத்து  கதறினால் அன்னை...

என்னையறியாமல் அழுகை பீரிட்டது...

மாலையில் அன்னையின் கதறலோடு
எடுத்து செல்லப்பட்டாள்...
புதைப்பதற்காக...

இரவில் தலைசாய்ந்து யார் மடியிலோ
தூங்கிப்போனேன்...

கனவுகள் என் தூக்கத்தை கலைக்க
கண்மூடி கிடந்தேன்...

பின்னிறவில் நான் மட்டும்
பூஜையறையிலிருந்த அனைத்து படங்களையும்
குப்பைதொட்டியில் வீசினேன்...

தங்கச்சி பாப்பாவின் புகைப்படமும்
பொம்மைகளையும் வைப்பதற்கு...
                   

                           ***********




கடல் காற்று வீசும்......

Monday 22 July 2013

தாகத்தை தீர்த்த கானல்நீர் - உரைநடை கவிதை



விடியும் வரை காத்திருந்தும்,
அலைபேசியில் அழைப்பில்லை
குறுச்செய்தியுமில்லை...

இதயத்தின் வலியாக உருமாறியது
இந்த காத்திருப்பு...

வேதனையில் அணுஅணுவாக
நான் துடிக்க, காலம் ஆயிரம்
ஊசிகளால் நொடிக்கொருதரம்
 துளைத் தெடுக்கிறது..

நேற்றுவரை இன்பத்தை தந்த உறவு
இப்பொழுது ஓவ்வொரு நொடியும் 
மரண  வேதனையை தருகிறது...

காதலுடன் வழங்கிய முத்தமும்,
பெறப்பட்ட முத்தங்களும் 
காமமாக தேன்றுகிறது

முதல் முறையாக எதோ தவறு 
செய்த உணர்வும்,கழிவிரக்கவும் 
என்னை ஆட்கொள்கிறது...

இனி நெஞ்சுறுதி துளியும்
இல்லை என் 
தனித்தன்மையை மீட்டெடுக்க... 

பசியற்ற உடலையும், வேதனையில் 
கலையிழந்த முகத்தையும்
இனி  மறைக்க முடியாது...

இருவர் மட்டும் இருக்கும் போது 
உறுதியாக இருந்த காதல்...

உறவினர்களிடமும்,
சமூகத்திடமும் வரும் போது
உடைந்து நிறம் மாறுகிறது...

காதலின் இன்பத்தை விட
வெறுமையான தனிமையே மேல்
என ஏன் தோன்றாமல் போனது?

உள்ளமும், புறமும் வெந்துபோய்
கிடக்கையில், அவலமும்
இயலாமையும் தான் மிஞ்சுகிறது...

அலுவலகத்தில் எளனமாக
பார்த்த பார்வைகளுக்கு
பதில் சொல்ல முடியாது..

சற்று கண்ணையர்ந்து
வேதனையில் முனங்கிகொண்டிருக்க

அழைப்புமணி ஒலிக்கிறது....

பிரமை என நினைக்கையில் மீண்டும்
ஒலிக்கிறது விடாமல்...!

உயிரற்ற உடலையை போல்
கணத்த இதயத்துடன்
நடத்து செல்கிறேன் கதவை நோக்கி...

பால்காரியோ, போப்பர் பையனோ
பதில் தந்து அனுப்பிவிட வேண்டும்
என் நிலையை அறியும் முன்...

கதவை திறந்து பார்க்கையில், ஆயிரம்
வேதனை தந்துகொண்டுருப்பவன்
நிற்கிறான்...

அறையலாமா அல்லது கட்டியணைத்து
அழலாமா...!

செய்வதரியாமல் நிற்கிறேன் மரம் போல்...

கண்டேன் சீதையை என்ற
அனுமானை போல்
"11 மணிக்கு நமக்கு திருமணம்" என்கிறான்...

ஒருநொடி அமைதிக்கு பின் "எனக்கு
ரவி சார், உனக்கு சாருலதா மேடமும்
சாட்சி கையெழுத்து போடுவார்கள்"
என சொல்லி
மனநிறைவுடன் சிரிக்கிறான்...

துடிக்க வைத்த வேதனை அனைத்தும்
அழுகையாக பீரிட, அவனை கட்டியணைத்து
இருக்கினேன் என் பலம் கொண்டு...

விம்பும் என் மார்பகம் அவன்
நெஞ்சையழுத்த,
நிலைதடுமாறி கதவில் சாய்ந்தோம்
சத்தத்துடன்...

"ஏய் லூசு, குழந்தை எழ போகுது"
"எழுந்தா என்ன"
"எழுந்தா இனி அங்கிள் இல்லை
அப்பானு செல்லு" என்று உச்ச முகர்ந்தான்...

சிவந்த கண்களிலிருந்து
துளிர்த்தது ஆனந்த கண்ணீர்
இருவரிடமும்...

இனி பொய் முகமுடி போட்டு
திரிபவர்களின் பேச்சை
பற்றி கவலையில்லை
எங்களுக்கு...

********



கடல் காற்று வீசும்........

Wednesday 17 July 2013

Talaash - இந்தி பட விமர்சனம்

தமிழ் படங்களை பார்த்து பார்த்து போர் அடித்ததால் ஒரு மாற்றத்திற்கு மற்ற மொழி படங்களை பார்ப்பது வழக்கம் (டிவியில் தான்). இந்தியாவில் இந்தி படங்கள் தான் மிக பெரிய வியாபார தளமாக உள்ளது. பொதுவாக தமிழ் படங்களை விட இந்தி படங்கள் தரத்தில் முதன்மையாக உள்ளது என்பதனை கசப்புடன் ஒத்துக்கொள்ள வேண்டும்.


அமீர் கானின் படம் என்றாலே எனக்கு ஒருவித ஈர்ப்பு வருகிறது ( லகான்னுக்கு பிறகு ) உண்மையில் இப்படத்திலும் தன்னுடைய நடிப்பால் இதை மீண்டும் நிருப்பித்திருக்கின்றார். தமிழில் பொதுவாக பெரிய நடிகர் படங்களில் அதிக முக்கியத்துவம் அந்த நடிகருக்கே கொடுக்கப்படும் மற்றும் அதிக காட்சிகள் அவரை சுற்றியே செல்லும். பெருன்பான்மையாக அவரை முன்னிருத்தியே படம் செல்லும். துணை நடிகர்களுக்கு அவ்வளவாக முக்கியத்தும் கொடுக்க மாட்டார்கள். ஆனால் நிறைய இந்தி படங்களில அவ்வாறு இருப்பதில்லை. இங்கு ஒவ்வொரு நடிகருக்கும் கதைக்கு தேவையான அளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள், நன்கும் பயன்படுத்திகொள்கிறார்கள். நிறைய இந்தி படங்களில் கதாநாயகிக்கு கதாநாயகனுக்கு நிகராக முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள். இந்த படத்திலும் அமீர் கானுக்கு நிகராக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அமீர் கான்  தன்னுடைய ஆர்பாட்டமில்லா நடிப்பால் நம்மை வியக்க வைக்கிறார். இனி கதைக்குள் செல்வோம்.

முதல் காட்சியே நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கின்றது. கடற்கறை ஓரமாக உள்ள அந்த சாலையில் செல்லும் கார் தீடீரென விபத்துக்குள்ளாகி பாதை மாறி கடலில் விழுவதை பார்க்கும் போதே த்ரில்லிங்கை நாம் அனுபவிக்க ஆரம்பித்துவிடுகின்றோம். இந்த விபத்தை துப்பறியும் பொருப்பை எற்கிறார் இன்ஸ்பெக்டர் அமீர். விபத்திற்குள்ளாகும்  காரை கடலில் இருந்து கிரென் முலம் வெளியே எடுத்து பார்த்தால் ஒரு பிரபல நடிகர் இறந்து கிடக்கிறார். அவர் குடித்துவிட்டு வண்டி ஒட்டவில்லை மற்றும் அவருடன் யாரும் பயணம் செய்யவில்லை, வண்டியின் ப்ரேக் முதலியவை நல்ல கண்டிசனில் இருக்கிறது. சாலையில் அந்த நேரத்தில் யாரும் இல்லை மற்றும் அவர் தன்னுடை படபிடிப்பு தளத்தில் இருந்து சென்ற பிறகு இரண்டு மணிநேரம் கழித்து விபத்து நடைப்பெற்று இருக்கிறது.  அந்த நடிகர் தனியாக கார் ஒட்ட விருப்பம் இல்லாதவர், எப்போதும் தன்னுடைய கார் டிரைவருடன் தான் செல்லுவார், அன்று மட்டும் ஏன் தனியாக சென்றார்? போன்ற கேள்வியால் அமீர் குழப்பம் அடைகிறார்.


பின் நடிகரின் மனைவியிடம் விசாரணை செய்யும் போது விபத்து நடத்த காலையில் அவர் அதிக பணத்தை கொண்டு சென்றது தெரிய வருகிறது. அந்த பணப்பை காரில் கிடைக்கவில்லை. இதன் அடிப்படையில் விசாரணை செல்லுகிறது. பின்னர் இந்த பணம் விபாச்சார புரோக்கர் ஒருவனுக்கு கொடுக்க எடுத்து செல்லப்பட்டது என்பதையும், அவன் இந்த நடிகரை முன்று வருடமாக ப்ளாக்மெயில் செய்து கொண்டுருப்பதை அறிந்த அமீர். விபச்சார விடுதிக்கு சென்று விசாரணையை மேற்கெள்ளும் போது அவன் சொந்த ஊருக்கு ஓடிவிட்டது தெரிய வருகிறது. இந்த விசாரணையின் போது தான் விபச்சாரியான கரீனா கபுர் அமீரை சந்திக்கிறாள் (கவனிக்கவும் அமீர் சந்திக்கவில்லை).




கரீனா கபுர் விசாரணைக்கு அவருக்கு உதவி செய்கிறார். விசாரணையின் போது அமீர் இரவு முழுவதும்  கரீனா கபுருடன் சுற்றி திரிகின்றார். இதற்கு விசாரணை மட்டும் காரணமல்ல சில வருடங்களுக்கு முன் தன் மகனை ஒரு ஏரியில் நடத்த விபத்தில் இழக்கிறார் (தண்ணீரில்  முழ்கி மகன் இறந்துவிடுகிறான் ). இதற்கு தன்னுடைய அஜாக்கிரத்தை தான் காரணம் என்ற குற்ற உணர்ச்சியால் இரவில் துக்கமில்லாமல் சுற்றி திரிகின்றார். இதனிடையில் தன் மனைவி ராணி முகர்ஜி ஆவிகளுடன் பேசும் பெண்மணி முலம் இறந்த தன்னுடை மகனுடன் பேசுகிறாள். இதனை அறியும் அமீர் இது முட்டாள் தனமானது என்று தன் மனைவியை கண்டிக்கின்றார். ஆனால் தனக்கு இதில் தான் நிம்மதி இருப்பதாக செல்லி தன் தோழியின் வீட்டிற்கு சென்று விடுகின்றாள். இதனால் அதிக மன உளைச்சலுக்கு அளாகிறார். பின் கிளைமாக்ஸில்  அமீர் கரீனா கபுரின் உதவியால் விபத்திற்கு காரணத்தை கண்டுபிடிக்கும் போது தான் அனைத்தும் அவருக்கு புலப்படுகிறது (நமக்கும் தான், அட போங்கட நீங்களும் உங்க சீனிமாவும்).


கரீனா கபுர் தேவையில்லாம் இதில் திணிக்கப்பட்டதாக அரம்பத்தில் அனைவருக்கும் தோன்றும். ஆனால் அவரின் கதாபாத்திரத்தின் அழுத்தம் படத்தின் முடிவில் தான் தெரிகின்றது. ராணி முகர்ஜியும் கரீனா கபுரும் தங்கள் நடிப்பை அழகாக பதிவு செய்திருக்கிறார்கள்.

அமீர் கானை பற்றி சொல்ல வேண்டும் எனில் அவர் மிக பெரிய நடிகர் எனினும் ஒரு சண்டை காட்சி கூட இல்லாமல் கதைக்கு தேவையான அளவிற்கு மட்டும் நடித்திருப்பது பிற நடிகர்கள் கற்க வேண்டிய பாடம். 

 இந்த படத்தில் என்னை அதிகம் ரசிக்க வைத்தது துணை நடிகர்களின் நடிப்பு குறிப்பாக புரோக்கருக்கு ஏடுபிடி வேலை செய்யும் அந்த நபரின் நடிப்பும் அவருக்கும்  விலைமாதுவிற்கும் இடையே இருக்கும் காதலை அழகாக பதிவு செய்திருக்கிறார்கள். அந்த விலைமாதுவின் பாத்திரப்படைப்பு அவளின் வலியை உணர செய்கிறது (கதாநாயகியை விட) .

இப்படத்தில் சில லாஜிக் சருக்கல்கள் இருக்கிறது. உதாரணமாக புரோக்கர் தன்னுடைய சிம் கார்டை மாற்றும் போது அதை உடைக்காமல் துக்கிப்போடுவது ஏன்? நாம சின்ன துண்டு சீட்டையே சுக்குநுறாக கிழிக்கும் போது அந்த சிம் கார்டால் தனக்கு அபத்து வரும் என தெரிந்தும் அதை அப்படியே துக்கி போடுவார்களா? அதை யாராவது எடுத்து பயன்படுத்துவார்கள் என்ற சிறு அறிவு கூடவா இல்லாமல் இருக்கும். மற்றொன்று புரோக்கரிடம் ஏடுபிடி வேலை செய்யும் அந்த கால் ஊனமுற்ற நபர் இறந்த நடிகரின் நண்பனிடம் இருந்து ப்ளாக்மெயில் முலம் வாங்கிய பணப்பையும் அவனுடன் ஓடி செல்ல வரும் விலைமாதுவும் ஒரே கலரில் பேக் வைத்திருப்பது எப்படி? போன்றவைகளை சொல்லலாம்.

பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் படி இருக்கின்றது குறிப்பாக டைட்டில் சாங்க் மிக இனிமையாக இருக்கிறது. பல முறை கேட்டு ரசிக்கலாம்.  இதன் கிளைமாக்ஸ் எனக்கு உடன் பாடு இல்லை என்றாலும் ரசித்தேன். 

சஸ்பேன்ஸ் த்ரில்லர் ரசிப்பவர்களை கண்டிப்பாக ஏமாற்றாது இந்த படம். 
ஒரு முறை பார்த்து ரசிக்கலாம்.

பீகார் பள்ளியில் நெஞ்சை உருக்கும் துயரம்

பாட்னா, ஜூலை 16-

பீகார் மாநிலம் சரன் மாவட்டம் கர்மசாதி காந்தவான் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் இன்று மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு திடீரென வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட குழந்தைகளை சாப்ராவில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே 11 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த குழந்தைகள் அனைவரும் 8 முதல் 12 வயதுக்கு உட்பட்டவர்கள். 

மேலும் 48 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

குழந்தைகள் சாவுக்கு பள்ளியில் வழங்கப்பட்ட உணவே காரணம் என்று கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த குழந்தைகளின் பெற்றோர், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். 

மாணவர்கள் சாவு தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். மேலும், பலியான குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

- மாலைமலர் செய்தி http://www.maalaimalar.com/2013/07/16190752/bihar-government-school-lunch.html

Friday 28 June 2013

கலாச்சாரம்

நேற்று சன் நியூஸ் தொலைக்காட்சி விவாத மேடையில் இணையத்தில் கொட்டிக்கிடக்கும் ஆபாசத்தை பற்றியும் அதனால் எற்படும் கலாச்சார சீரழிவு மற்றும் அதை முடக்குவது தொடர்பான விவாதத்தை பார்க்க நேர்ந்தது (வழக்கம் போல் பாதியில் இருந்து தான்). அதில் விருந்தினர்கள் அனைவரும் ஒரே கருத்துகளை முன் வைக்க அராத்து அவர்கள் மட்டும் மாற்று கருத்தை பதிவு செய்தார். 

விவாத இறுதிக்கட்டத்தில் நமது கலாச்சாரம் வெளிநாட்டில் இல்லாத மிக உன்னதமானது எனவும் ஆபாச இணையதளங்களால் இளைய தலைமுறையினர் சீரழிவதை தடுக்க அனைத்தும் தடை செய்ய வேண்டும் என முடிக்கப்பட்டது. இப்பதிவு மேற்கூறியதை பற்றியல்ல. விவாதத்தில் உபயோகிக்கப்பட்ட ஒரு சொல்லை பற்றியது. அந்த சொல் "நமது கலாச்சாரம்"

உண்மையில் நம்ம கலாச்சாரம் அவ்வளவு சிறந்ததா? என்ற எண்ணம் எனக்கு எற்பட்டது, இப்போ இல்லை, கிட்டத்தட்ட 20வது வருடத்திற்கு முன்னால். அப்போ எனக்கு இந்த எண்ணம் எற்பட காரணமாக இருந்த ஒரு நிகழ்வையும் அதே காலத்தில்  வாரபத்திரிக்கையில் வந்த செய்தி ஒன்றையும் நான் இங்கு அப்படியே பதிவு செய்கிறேன். எது சிறந்த காலாச்சாரம் என்பதை உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன். இதை படிப்பதற்கு முன்னால் மீண்டும் நினைவுபடுத்தி கொள்ளுங்கள். இந்த எண்ணம் எனக்கு வந்தது சுமார் 20 வருடத்திற்கு முன்னால். 

எனது சிறுவயதில் எங்கள் வீட்டின் அருகில் குடியிருந்த ஒரு சகோதரியின் வாழ்க்கையில் எற்பட்ட சோகம் என்னை வெகுவாக  பாதித்தது. என்னைவிட அவர்கள் சுமார் 10 வயது பெரியவர்கள்.அவர்களுக்கு அப்போ வயது சுமார் 23 இருக்கலாம்.  நான் அவர்களை அக்கா என்று தான் அழைப்போன். எனது வீட்டில் எனக்கு பிடிக்காத சமையல் செய்யும் போது வீம்புக்கு நான் சாப்பிடாமல் இருக்கும் போது அவர்கள் என்னை பலவந்தமாக அவர்கள் வீட்டில் சாப்பிட் வைப்பார்கள். எனது கூட பிறக்காத சகோதரியாக அவர்கள் என் மீது பாசம் வைத்திருந்தார்கள். பல நேரங்கள் எங்கள் அம்மாவுடன் எங்கள் வீட்டில் தான் இருப்பார்கள். எங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் அவர்களை ரொம்ப பிடிக்கும். அவர்களுக்கு அம்மா கிடையாது. அவர்கள் அப்பாவும் அண்ணன்களும் பல இடங்களில் தேடி எந்த கெட்ட பழக்கமும் இல்லாத ஒரு வரன் பிடித்து அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தார்கள் (ஜோஸியம் லொட்டு லொசுக்கு எல்லாம் பார்த்துதான்). அவர்கள் திருமணமும் மிக சிறப்பாக நடைப்பெற்றது. மாப்பிள்ளையும் அவர்கள் எதிர் பார்த்ததைவிட நல்லவராக இருந்தார். அந்த அக்காவை போல் அவரும் எங்களுக்கு ஒரு புது உறவாக கிடைத்தார். இந்த மகிழ்ச்சியெல்லாம் சில மாதங்களே நீடித்தது. ஒரு வருடங்களுக்குள்ளாக அந்த சகோதரியின் கணவர் ஒரு விபத்தில் இறந்தார். அந்த வயதில் அந்த சோகம் எனக்கே மிக பெரிய பாதிப்பை எற்படுத்திய போது மற்றவர்களை பற்றி சொல்ல தேவையில்லை. இந்த மரணத்தால் ஒருவருடையதல்ல, இருவருடைய வாழ்க்கை அழிந்ததால் துக்கம் இருமடங்காக ஆனது. சந்தோசமாக நான் சாப்பிட்ட வீட்டில் துக்க காரிய நாளில் சாப்பிட்டது எனக்கு நரக வேதனையை தந்தது.அதன் பின் அந்த சகோதரி தன்னுடைய வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துக்கொண்டாள். யாரிடமும் சரியாக பேச மாட்டார்கள்.பொதுவாக எந்த சுப நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளமாட்டார்கள்.  ஒருவேளை மற்றவர்கள் தன்னை பார்க்கும் போது அபசகுனமாக நினைக்க கூடும் என்ற எண்ணமாக இருக்கலாம்.  எங்களுக்கு அவர்களோடு தொடர்ப்பு இருந்த வரை அந்த சகோதரி மறுமணம் செய்து கொள்ளவில்லை, அவர்கள் அப்பாவும் அண்ணன்களும் எவ்வளவு வலியுருத்தியும். அதற்கு அவர்கள் மனமும் இடம்  தரவில்லை (ஒருவேளை மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற அதே எண்ணம் எற்பட்டுருக்கலாம்) . 

அதே காலகட்டத்தில் ஒரு வாரபத்திரிக்கையை படிக்க நேர்ந்தது. அதில், வெளிநாட்டில் ஒரு மணமகளையும் அவரை அழைத்து செல்லும் ஒருவருடைய புகைப்படமும் இருந்தது. அதன் கீழ் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அது, மணமகளை மணமேடைக்கு அழைத்து செல்லும் நபர் மணமகளுக்கு என்ன உறவாக இருக்கும் என்று.

அதன் பதில். 

மணமகளை அழைத்து செல்லும் நபர் மணமகளின் மகன். அந்த மணமகளுக்கு 50 வயதாகிறது. தன்னுடைய மகன் முன்னிலையில் மகிழ்ச்சியாக திருமணம் செய்து கொள்கிறாள். 

தான் மட்டும் மனைவியுடன் மகிழ்ச்சியாக இருக்கும் போது தன்னுடைய அன்னை தனிமையில் இருப்பதை விரும்பாத மகன், முன்னின்று நடத்திய திருமணம் அது. 50 வயதானவர்களுக்கு கூட ஒரு புதிய வாழ்க்கை தேவை என எண்ணும் ஒரு சமுதாயம் இருக்கத்தான் செய்யுது.

இங்கு முதல் திருமணம் நன்றாக அமைந்தால் சரி இல்லையென்றால் புதுவாழ்க்கையை அமைத்துக்கொள்வது அவ்வளவு எளிதல்ல தற்போது (முன்னாடி அதுவும் வாய்ப்பில்லை). உடன்கட்டை ஏறும் பழக்கம் நம்நாட்டில் தான் இருந்தது என எண்ணும் போது உண்மையில் நமது கலாச்சாரம் உன்னதமானதா? என்ற கேள்வி எழுகிறது.


Thursday 13 June 2013

ஞாபகம் வருதே!

இன்று செல்போன் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு பெருகிவிட்டது (ஒன்றிரண்டு பேர்கள் இன்னும் பயன்படுத்தாமல் இருக்கலாம்). பள்ளி செல்லும் மாணவர்கள் கூட செல்போன் வைத்திருக்கிறார்கள். சட்டை பேண்ட் போட மறந்தாலும் பெரும்பாலும் செல்போனை நாம் மறக்க மாட்டோம். நம்மிடத்தில் செல்போன் ஒரு முக்கிய இடத்தை பிடித்துவிட்டது என்பது முற்றிலும் உண்மை. செல்போன் இல்லாத ஒரு நாளை கூட நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியாது. செல்போனின் தீமைகளை பலர் பட்டியலிட்டாலும் அது நம் காதுகளுக்கு ஏறாது சொல்லப்போனால் அது அவர்களாளேயே புறக்கணிக்க முடியாது . ஒருவேளை நாம் செல்போனை முற்றிலுமாக புறக்கணிக்க எண்ணினாலும் தோல்வி என்னவோ நமக்கு தான.

செல்போனை போன்று மனிதன் வாழ்க்கையில் மற்றொரு இன்றியமையாத நிகழ்வு ஒன்று டி.வி. சினிமாவை விட ஒரு சதவிதமாவது முன்னால் இருப்பது டி.வி தான். நம் வீட்டில் உள்ள டி.வியில் மொத்தம் எத்தனை சேனல்கள் ஒளிபரப்பபடுகிறது என்பது சத்தியமாக நமக்கு தெரியாது( உங்களுக்கு தெரிந்திருந்தால் கின்னஸ் ரெக்கார்டுக்கு முயற்ச்சி செய்யவும்).இப்போ இருக்கும் காலத்தை விட்டு சுமார் 25 வருடத்திற்கு பின்னோக்கி சென்று பார்த்தால். அந்த காலத்தில் டெலிபோன் வைத்திருந்தவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். டி.வி யில் DD சேனலை தவிர வேறு சேனல்கள் இல்லை. DD யில் பார்த்து மகிழ்ந்ததை போல் இப்பொழுது உள்ள எண்ணற்ற சேனல்கலால் அந்த மகிழ்ச்சியை தர முடியவில்லை என்பதை நாம் அறிவோம்.
இந்த டெலிபோனில் நீங்கள் பேசியதுண்டா?

சிறு வயதில், நாம் கண்டு கேட்டு ரசித்து மகிழ்ந்த பல நிகழ்வுகள் கால வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு, நம்முடைய ஆழ் மனதில் படிந்துவிட்டது.  அப்படி நம் ஆழ் மனதில் படிந்து இருக்கும் நினைவுகளை நாம் முற்றிலும் மறக்கவில்லை என்றாலும், அதை நாம் நினைவுபடுத்தி பார்ப்பது அபுர்வம். 

நான் முற்றிலுமாக மறந்த பல சிறு வயது நினைவுகளை மீண்டும் எனக்கு நினைவுப்படுத்தியது ஒரு நிகழ்ச்சி. ஒரு முன்று மாதத்திற்கு முன் ஒரு பள்ளி ஆண்டு விழாவை பார்க்க நேர்ந்தது. அதில் வந்த ஒரு கலை நிகழ்ச்சி பாட்டை கேட்டவுடன் நான் என் சிறு வயதிற்கே சென்றுவிட்டேன்.அந்த பாடல் பலவற்றை ஒன்றன் பின் ஒன்றாக ஒரு சங்கிலி தொடர் போன்று அனைத்தையையும் எனக்கு நினைவுபடுத்தியது. அந்த நினைவுகளில் ஒன்றை மட்டும் சொல்லிவிட்டு அந்த பாடலை பற்றி கூறுகிறோன்.

சிறு வயதில் நாங்கள் குடியிருந்த இடத்தில் சற்று வசதி படைத்த ஒருவர் வீட்டில் மட்டும் தான் டி.வி இருந்தது. மாலை நேரத்தில் அவர்கள் வீட்டில் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் டி.வி பார்க்க அனுமதிப்பார்கள். ஒரு நாள் அவர்களுக்கு வீட்டில் என்ன வேலையோ அன்று டி.வி போடவில்லை. நாங்கள் எல்லாரும் விளையாட சென்றுவிட்டோம் ஆனால் எனது தம்பி (தம்பியின் வயது அப்போ நான்கு) மற்றும் சில சிறுவர்கள் மட்டும் அவர்கள் வீட்டின் முன்பு டி.வி போடுவார்கள் என்று காத்திருந்தனர். அப்பொழுது அந்த வீட்டின் பெண்மணி டி.வி போடவில்லை நாளைக்கு வாங்கள் என்று அவர்களை விரட்டி கொண்டுருந்தார்கள். அந்த நேரம் பார்த்து என் தம்பியை அழைத்து செல்ல எங்கள் அம்மா அங்கே வர இதையெல்லாம் கேட்க நேர்ந்தது. இதன் காரணமாக எங்கள் அப்பாவிடம் சென்று நாமும் டி.வி வாங்க வேண்டும் என்று சண்டை போட்டார்கள்.  அதன் பயனாக எங்கள் அப்பா டி.வி வாங்க ஒப்பு கொண்டார், சில நிபந்தனைகளுடன்(அதில் ஒன்று அடுத்த வருடம் வரை புதிய துணிமணி கேட்க கூடாது என்று. பின்னர் இந்த நிபந்தனையை எங்கள் அம்மா காற்றில் பறக்கவிட்டது தனி கதை). முதல் முதலில் நாங்கள் வாங்கிய கதவுடன் கூடிய அந்த டி.வியின் பெயர் Westen(நீங்கள் கேள்விபட்டுருக்கலாம்). அந்த நேரத்தில் நடுத்தர குடும்பத்தினர் ஒரு டி.வி வாங்குவது என்பது மிக கடினமான ஒன்று. எங்களை பார்த்து தொடர்ந்து பலர் டி.வி வாங்கினார்கள் (எல்லாம் இன்ஸ்டால்மட்டில் தான்). அந்த டி.வி எங்கள் வீட்டிற்கு வந்த போது இருந்த மகிழ்ச்சியை இப்போ நினைக்கும் போதும் ஒரவித மனகிளர்ச்சி எற்படுகிறது. அந்த கருப்பு வெள்ளை டி.வி தந்த மகிழ்ச்சியை எனக்கு இப்போ உள்ள LED டி.வியால் தர முடியவில்லை.

கிட்டதட்ட இதே போல தான் இருந்தது

என் பழைய நினைவுகளை நினைவு படுத்திய  இந்த பாடலை இணையத்தில் தேடும் போது என்னை போல் பலருக்கும் அதே உணர்வு எற்பட்டதை அறிய முடிகிறது. நீங்கள் பல முறை பார்த்து கேட்டு மறந்த ஒற்றுமையின் வலிமையை உணர்த்தும் இந்த அனிமேட் பாடலை மீண்டும் கேட்டு பாருங்கள், உங்களுக்கு அந்த உணர்வு எற்படும்.


Ek Titli Anek Titliyan


Title: EK ANEK AUR EKTA (Ek titli Anek Titliyan)
Synopsis: An animation film weaving a story around the proverb "United we stand, Divided we fall".
Direction: Vijaya Mulay
Animation: Bhimsen
Music: Vasant Desai
Duration: 7.29 mins
First telecast year: 1974
Telecast By: Doordarshan...Very nostalgic...humming ' Ek titli, anek titliyaan'.
Singer: Sung by "SADANA SARGAM" At her age of 6 YEARS.

Suraj ek chanda ek tare anek (Lyrics)
Intro Text:
Films division dwara prastuthi…
Shiksha proudhogiki kendr ki bhent
Lyrics:
mmmm mmmm
hind desh… mmm huhu… hum sabhee…. ek hain… tara ra ra raaa
bhashaa anek hain
mmmm mmmm bhasha anek hain…. mmmm mmmmm
yeh anek kya hain didi ?
anek yani bahut saare….
bahut saare, kya bahut saare?
acha, batatee hoon…
suraj ek…
chanda ek…..
taare anek….
taroN ko anek bhi kehte hain ?????
nahi nahi !!
dekho phir se
suraj ek, chanda ek, ek ek ek karke taare bane anek….
theek se samjhao naa didi
dekho dekho ek gilahari
peeche peeche anek gilahariyan
ek thithli, ….. ek aur thithali……
ek ek ek karke ho gayee ab, anek thithliyaaN…
samajhgaya didi
ek ungli, anek ungliyaan
haaan,
didi didi woh dekho anek chidiyan…
anek chidiyoN ki kahani sunoge ….
haan haan
aa aa aaa,
ek chidiya, ek ek karke anek chidiya….
dana chugne aayee chidiyan …..
chorus : didi humen bhi sunaonaa…….
tho suno phirse…
ek chidiya, anek chidiyaN
dana chugne baith gayee thi …..
hai raam, par wahan byaadh ne ek jaal bhijaya tha…
byaadh, byaadh kaun didi ?
byaadh … chidiya pakadne wala
“phir kya hua didi, byaadhne unhe pakad liya, maar daala… ”
un..huh…
Himmat se gar jute rahe to
chote ho par, mile rahe tho
bada kaam bhi hove bhaiya..
bada kaam bhi hove bhaiya …
ek..do..theen..
Chaturrr cidiyaaN, sayaani chidiyaaN
miljul kar, jaal le kar, bhaagee chidiyan
furrrrrrrrrrrrrrrrrr
door, ek gaaon ke paas, chidiyon ke dost, chuhe rahte the….
aur unhone, chidiyonkaa jaal, kaat diya………
tho dekha ki tumne, anek, sirf ek hojate hain tho kaisa mazaa aata hain
didi main bataoon…
HO GAYE EK …
BAN GAYEE TAKAT..
BAN GAYEE HIMMAT…
didi agar hum ek ho jaayen to bada kaam kar sakte hain?
haan haan, kyon nahi …
to is ped ke aam bhi thod sakte hain ???
haan, thod sakte hain, par jugat lagani hogi …
*
* *
* * *
* * * *
achaa, eh jugat, wah… bada mazaa ayegaa..
hind desh ke niwasi sabhi jana ek hain, -2
rang-roop vesh-bhaasha chaahe anek hain -2
ek-anek… ek-anek…
suraj ek, chanda ek, taare anek,
ek titli, anek titaliyaaN
ek gilhari , anek gilhariyaaN
ek chidiyan, ek ek… anek chidiyaan
bela gulab juhi champa chameli….. -2
phool hain anek kintu mala phir ek hai …-2
Text:
Sahayak: S.M. Hasan, Mahesh Taavre, Girish Rao
Design animation thadhaa nirmaan: Bheem Sen
Centre for educational technology
N.C.E.R.T
Aurobindo Marg
New Delhi - 110016
youtube-ல் காணோளியை பார்க்க இங்கு சொடுக்கவும்




கடல் காற்று வீசும்.....





Thursday 6 June 2013

எனக்கு பிடித்த பாடல்

பொதுவாக நமக்கு ஒவ்வொரு காலத்திலும் எதாவது ஒரு பாடல் மனதை மயக்கும். அப்படி நமது மனதை மயக்கிய பாடலை திரும்ப திரும்ப கேட்டு மகிழ்வோம், அதுவும் காதல் பாடல் என்றால் ரசிப்புதன்மை இரண்டு மடங்காக ஆகும். அது நமக்கு புரியாத  மொழியாக இருந்தாலும் மேலும்  நமது நண்பர்களுக்கும் பரிந்துரைப்போம் ( யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் ). நான் அதிகம் வேற்று மொழி பாடல்களை கேட்க மாட்டேன் என்றாலும் நண்பர்களின் பரிந்துரையால் சில பாடல்கள் கேட்க நேர்ந்தது.  அப்படி கேட்டவுடன்   ஈர்க்கப்பட்ட பாடல் தான் இந்த Man Tu Talbat. உங்களுக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன். இப்பாடல் படம் வந்து சில வருடங்கள் ஆனதால் பலர் கேட்டுருக்கலாம். ஒருவேளை கேட்காமல் இருப்பவர்களுக்காக இப்பதிவு.
                         

                                                  Man Tu Talbat ( Lyrics )

Tere Bina, Jee Na Paaun, Sung Tere Jee Na Paaun
Hoke Juda Ab Hum Milein, Ab Na Kabhi Hongey Judaa

Ab Kyaa Kahun Iske Siva;
Man Tu Talbat, Tu Man Talbat (2)

Vey Nakh Inti (2), Ye Noor Al Kahein, Be Nakh Inti
Teb Li Haya Dhi, Takh Li Un Yunhi, Ukhne Vele Geynvhi, Vifte Ki...

Ab Kyaa Kahun Iske Siva;
Man Tu Talbat, Tu Man Talbat (2)

Tere Bina, Jee Na Paaun; Sung Tere Jee Na Paaun (2)
Hoke Juda Ab Hum Milein, Ab Na Kabhi Hongey Judaa

Ab Kyaa Kahun Iske Siva;
Man Tu Talbat, Tu Man Talbat (4)

[Oh My Love, I Have The Key In Love, I Wil Be There For You, Always Be There For You]

Ab Mil Gaye Lo Fir Se Hum, Subahon Ne Fir Choomein Kadam
Kudrat Ne Haathon Se Likhey, Khud Rishtey Ye Janmo Janam[2]
Mil Kar Rahengey Hum Yun Sada;
Man Tu Talbat, Tu Man Talbat (2)

[Oh My Love, I Have The Key In Love, I Wil Be There For You, Always Be There For You]

Vey Nakh Inti (2), Ye Noor Al Kahein, Be Nakh Inti
Teb Li Haya Dhi, Takh Li Un Yunhi, Ukhne Vele Geynvhi, Vifte Ki...

Dil Ke Woh Rag Pe Hai Likha, Har Lafz Tere Pyaar Ka
Ye Waqt Ne Hai Chaha Bhahut, Lekin Na Fir Bhi Mit Saka
Har Lamha Ye Kehne Laga
Man Tu Talbat, Tu Man Talbat (4)

[Oh My Love, I Have The Key In Love, I Wil Be There For You, Always Be There For You]


பாடலை தரவிரக்க இங்கு சொடுக்கவும்.




கடல் காற்று வீசும்.....




Saturday 1 June 2013

ஐ.பி.எல்(I.P.L), கிரிகெட்டின் மோகத்தை குறைக்குமா?


இதை எழுதுவதற்கு இதை விட சரியான தருணம் இல்லை என நினைக்கிறேன். இந்தியாவை பொருத்தவரை கிரிகெட்டின் மோகம் மற்ற நாட்டை விட அதிகமாகவே (கிரிகெட்டிற்கு சோறு போடுவதே நாம் தான் எனவும் சொல்லலாம்) இருக்கிறது. இங்கு நினைவு தெரிந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை கிரிகெட்டின் மீது ஒருவித மோகம் கொண்டு இருப்பவர்களாக இருக்கிறார்கள். எனது பெண் நண்பியின் மகள் இரண்டாம் வகுப்பு படிக்கிறால் அவளுக்கு கிரிகெட்டில் அனைத்தும் அத்துப்படி. ஒரு மாலை எனது நண்பியிடம் இருந்து போன் வந்தது, அன்று நடந்த கிரிகெட்டில் இந்தியா தோற்றதால் தனது மகள் அழுதுகொண்டுருப்பதாகவும் எனவே அவளை சமாதானம் படுத்துமாறு எனக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அவளிடம் அரை மணிநேரம் பேசி இந்தியாவிற்கு இன்னும் வாய்ப்பிருக்கிறது, எனவே கவலை பட தேவையில்லை என சமாதானம் படுத்தினேன். ஆனால் அன்று மழை வந்தால் என்ன செய்வது என கேட்டு என்னை திகைக்க வைத்தால். 



நானும் ஒரு காலத்தில் கிரிகெட்டின் மீது அதிக மோகம் கொண்டுருந்தேன். ஆனால் இப்போது அந்த மோகம் முற்றிலுமாக இல்லை. முன்பேல்லாம் இந்தியா தோற்றால் அதை ஜிரணிக்க ஒரு நாளாவது ஆகும். இப்போது அடுத்த பத்தாவது நிமிடத்தில் மறத்துவிட்டு வேறு வேலை பார்க்க சென்றுவிடுகிறேன். 

ஸ்போர்ட் சேனல்கள் பே சேனல்களாக ஆனபோது வெளிநாட்டில் நடக்கும் கிரிகெட் மேச் பார்க்க முடியாத சூழ்நிலையில் அதை பார்ப்பதற்கு டிவி கடைகளின் வெளியே நின்று பார்த்திருக்கிறேன். தற்போது பகல் இரவு நடக்கும் மேச்சை கூட பெரும்பாலும் நான் பார்க்காமல் படுக்க சென்றுவிடுகிறேன். என்னுடைய மோகத்தை குறைந்ததற்கு முக்கிய காரணம் ஐ.பி.எல் தான். ICL போல் இதுவும் மக்களின் கவனத்தை ஈர்க்காது என நினைத்தேன். ஆனால் இது மக்களிடம் அதிக ஆதர்வு பெற்றது எனக்கு ஆச்சர்யத்தை அளித்தது. இன்று வரை என்னால் ஜிரணிக்க முடியாத ஒன்று வெளிநாட்டு வீரருடன் சேர்ந்து விளையாடுவது தான் அதுவும் பணத்திற்காக. நாட்டிற்காக அல்லாமல் பணத்திற்காக மட்டும் விளையாடும் விளையாட்டாக மாறிய பின் எனக்கு அதன் மீது மோகம் குறைவது இயல்பு தானே. என்னை போல் எத்தனை பேர் இதை உணர்ந்தார்களோ தெரியவில்லை. 2013 ஐ.பி.எல் யை, நான் மற்ற சேனல்களை பார்க்கும் போது அதில் வரும் விளம்பர இடைவேளியின் போது மட்டுமே பார்த்தேன், அதுவும் ஆர்வமின்றி . இன்று சூதாட்ட புகார் விஷ்வருபம் எடுத்த போதும் அதை பற்றிய செய்தியை கூட படிக்க எனக்கு  விருப்பம் இல்லை. மேலும் ஐ.பி.எல் லே எனக்கு சூதாட்டம் போல் தான்  தெரிகிறது. எனக்கு கிரிகெட்டின் மீது ஆர்வம் குறைந்தது போல் மற்றவர்களுக்கும் குறையும் என சொல்லவில்லை, ஆனால் குறைய வாய்ப்புள்ளது என்பதே உண்மை.




கடல் காற்று வீசும்.....

Thursday 30 May 2013

புத்துயிர்ப்பு (Resurrection)


புத்தகங்கள் மனிதனுக்கு கிடைத்த வரபிரசாதம் என்றால் மிகையில்லை. புத்தகங்களின் மீது அதிக பற்று வைத்திருத்தவர்கள் எனக்கு நண்பர்களாக கிடைக்கப்பெற்றதால் தான், உலக புகழ் பெற்ற  ரஷ்ய மொழிபெயர்ப்பு புத்தகங்களின் அறிமுகம் எனக்கு கிடைத்தது. ரஷ்ய நாவல்கள் அதிகம் படித்ததால் என்னவோ எனக்கு மற்ற புத்தகங்களின் மீதான ஆர்வம் வெகுவாக குறைந்தது. எனக்கு அதிகம் பிடித்த ரஷ்ய நாவல்கள் போர் இல்லாத இருபது நாட்கள்,  அதிகாலை அமைதியிலே, விடி வெள்ளி, செம்மணி வளையல்கள், அலெக்சாந்தர் புஷ்கினின் ஸ்பேடுகளின் ராணி, வெண்ணிற இரவுகள், மூன்று காதல் கதைகள் மற்றும் லேவ் தல்ஸ்தோய்யின் புத்துயிர்ப்பு. இதில் அதிகாலை அமைதியிலே என்ற நாவலையை உல்டா செய்து எடுக்கப்பட்ட படம் தான் பேராண்மை. இந்த படம் வந்த போது என் நண்பன் இந்த படத்தை கண்டபடி திட்டிக்கொண்டிருந்தான். அவனுக்கு அந்த நாவல் ரொம்ப பிடித்திருந்ததால் இந்த படத்தை இவ்வாறு உல்டா செய்து எடுத்தது அவனுக்கு பிடிக்கவில்லை. நாங்கள் நிறைய நேரங்களை  இந்த புத்தகங்களை பற்றி பேசியே கழித்திருக்கிறோம். இந்த புத்தகங்கள் ஒரு புதிய உலகத்திற்குள் செல்லும் வாய்ப்பை எனக்கு எற்படுத்தி தந்தன . 



மொழிபெயர்ப்பு நாவல்கள் படிக்க தொடங்கியவுடன் எனக்கு கிடைத்த இரண்டாவது புத்தகம் புத்துயிர்ப்பு நாவல். இந்த புத்தகத்தை எனக்கு தரும் போது இப்புத்தகத்தை பற்றிய சிறப்பை நண்பன் கூறவில்லை. நல்ல புத்தகம்  என்ற ஒற்றை வார்த்தையில் சொன்னான். பொதுவாக நண்பர்களிடம் வாங்கும் புத்தகத்தை நான் 99.99% திருப்பி தந்துவிடுவோன். அந்த மீதி உள்ள 0.01% அவர்களே எனக்கு அன்பளிப்பாக தரும் புத்தகத்தை குறிக்கும்.(பின்னர் புத்துயிர்ப்பு நாவலை எனக்கு அன்பளிப்பாக தந்த நண்பனுக்கு நன்றி). புத்துயிர்ப்பு நாவலை நான் படிக்கும் போது எந்த எதிர்பார்ப்பும் இன்றி படிக்க ஆரம்பித்தேன்.  ஆனால் ஒவ்வொரு பக்கமும் எனக்கு ஒருவித பிரமிப்பை எற்படுத்தியது.லேவ் தல்ஸ்தோய் அவர்கள் எதற்காக இந்த நாவலை எழுதினார் என்பதை பின்னர் அறிந்த போது பிரமிப்பு இரண்டு மடங்காக ஆனது. புத்தகத்தை எழுத அவர் எடுத்துகொண்ட பத்தாண்டுகளில் அவருக்கு எற்பட்ட  கழ்டங்களை இந்த புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் நாம் உணர முடியும். புத்தகத்தின் முதல் பாகத்தில் 37 மற்றும் 39 & 40வது அத்தியாயங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்.  புத்தகத்தை ஒரே இரவில் என்னால் படிக்க முடியவில்லை என்றாலும் அந்த இரவுகளில் படிக்கும் போது எற்பட்ட அந்த பிரமிப்பு அதனால் எற்பட்ட அனுபவத்தையும் இப்போது நினைக்கும் போதும் ஒருவித மகிழ்ச்சி என்னுள் எழுகிறது.

இன்நாவலை மொழிபெயர்த்த ரா. கிருஷ்னையா அவர்களையும் இங்கு நினைவு கூற வேண்டும். இவரை விட வேறு யாரும்  இவ்வளவு திறம்பட மொழிபெயர்த்திருப்பார்களா என்பது சந்தேகமே. நாவலை படிக்கும் போது அதில் வரும் நெஷ்லுதவையும், மாஸ்லவாவையும் உயிருடன் நம் கண்முன் நிழலாட செய்திருப்பார். ஒரு முறை அல்ல, பலமுறை   அனைவரும் படிக்க வேண்டிய ஒரு அற்புத படைப்பு இந்த புத்துயிர்ப்பு நாவல். அப்படி நீங்கள் இதுவரை படிக்கவில்லையென்றால் உடனே தேடிபிடித்து  படியுங்கள்.


கடல் காற்று வீசும்.......


Thursday 23 May 2013

cuttlefish (கணவாய் மீன்)


நுலகத்தில் கடல் உயிரினங்களை பற்றி படிக்கும் போது என் கண்ணில் பட்டது இந்த கணவாய் மீன். இதன் ஆங்கில பெயர் cuttlefish. ஒரு சாதாரண உயிரினம் என்று நாம் நினைக்கும் பல உயிரினங்கள் அதிசயத்தக்க சிறப்பு இயல்புகளை கொண்டு இருக்கும் என்பதை நாம் அறிவோம். அதை போன்று ஒரு அதிசய உயிரினம் தான் இந்த கணவாய் மீன். கணவாய் மீன் என்ற பெயர் காரணமாக நான் இதனை மீன் இனம் என்று நினைத்துவிட்டேன், ஆனால் படிக்கும் போது தான் தெரிந்தது, இது Cephalopoda என்ற உயிரின வகையைச் சேர்ந்தது என்று. இந்த வகையை சேர்ந்த மற்ற உயிரினங்கள் தான் Octopus,Squid,nautiluses. இவை அனைத்தும் முதுகெலும்பில்லாத கடல் வாழ் உயிரினங்கள் ஆகும். 



கணவாய் மீனின் மேல்பகுதி மேடிட்டு இருந்தாலும் அதன் அடிப்பகுதி தட்டையாக இருக்கும். இதனுடைய தோலின் அடி பகுதியில் பல நிறங்களை கொண்ட வண்ண பைகள் உள்ளன. இந்த பைகள் முலமாக தான் விரும்பும் நிறத்தை தன் தோல் மீது படிய செய்து நிறத்தை மாற்றுகிறது. 



கணவாய் மீனின் உடலின் பக்கவாட்டினை சுற்றி இலை போன்ற மெல்லிய உறுப்பு இருக்கிறது. இது நீந்தும் போது இந்த இலை போன்ற மெல்லிய உறுப்பு அசைவது பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.  ஆக்டோபஸ் போன்று இதற்கும் தன் நிறத்தை மாற்றும் திறன் பெற்றது. பொதுவாக இது உணவு தேடும் போது அது இருக்கும் இடத்தின் நிறத்தை போன்று தன்னையும் மாற்றி கொள்ளும் இதனால் இரை இதன் இருப்பை அறியாமல் அருகில் வரும் போது பிடித்துக்கொள்ளும் மற்றும் எதிரிக்கு தான் இருப்பை தெரியாத வாரு தன்னை மறைத்துக்கொள்ளுவதற்கும் இது நிறம் மாறுகிறது மேலும் நேரடியாக எதிரியிடம் மோதும் போது, தான் தோற்கும் நிலையில்,  கணவாய் மீன் எதிரியிடம் இருந்து தப்பித்து கொள்ள ஆக்டோபஸ் போன்று ஒரு வித மை போன்ற திரவத்தை வெளிப்படுத்தி அதனால் எதிரியின் கண் பார்வையை மறைத்து அதனை நிலைகுலைய செய்து அங்கிருந்து தப்பித்துவிடும்



இதற்கு நீளமான எட்டு விரல்கள் நீந்துவதற்கும் மற்றும் இரையை பிடிப்பதற்கு இரண்டு விரல்களும் இருக்கும். இரை பிடிக்கும் விரல்கள் சற்று நீளமாக இருக்கும். இந்த இரை பிடிக்கும் விரல்கள் மற்ற நேரங்களில் தன் மற்ற விரலோடு மறைத்து வைத்திருக்கும். 


. கணவாய் மீன்களில் பல வகைகள் உள்ளன. இந்த மீன் பல நாடுகளில் மனிதனின் உணவாக பயன்படுகிறது. .உணவாக பயன்படுவதால் தான் நாம் இதை மீன் என அழைகிறோம் என நினைகிறேன்.


கடல் காற்று வீசும்.....

Saturday 18 May 2013

Taarak Mehta ka Ooltah Chashmah.



இன்றைய  உலகில்  பொழுதுபோக்கில் முதன்மையாக இருப்பது தொலைக்காட்சி. மேலும் தமிழ் தொலைக்காட்சியில் பெண்களுக்கென்றே ஒரு தனி இடம் வகிப்பது சீரியல்கள.

முதலில் இந்த சீரியலால் எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை உங்களிடம் பகீர்ந்துகொள்கிறேன். வெறும் அனுபவம் மட்டும் அல்ல அதில் ஒரு பாடமும் கற்றுக்கொண்டேன்.

எனது நண்பர்களில் ஒருவர் புதிதாக வீடு கட்டியிருந்தார். அவர் வீட்டு கிரகபிரவேசத்திற்கு போக முடியாத சூழலில் வேறு ஒரு நாளில் வருவதாக வாக்குருதி கொடுத்திருந்தேன். இரண்டு வாரம் கழித்து, ஒரு வீட்டு அலங்கார பொருளை வாங்கி கொண்டு அவர் வீட்டுக்கு இரவு 07.00 மணிக்கு சென்றேன்.

நண்பரும் மகிழ்ச்சியுடன் என்னை அழைத்து சோபாவில் அமர செய்து டீ பிஸ்கெட் கொடுத்து உபசரித்து என் அருகில் அமர்ந்துவிட்டார். பின்பு நான் கேட்ட கேள்விக்கு ஏனோ தானோ என்று பதில் அளித்தார். முதலில் எனக்கு புரியவில்லை. பின்புதான் தெரிந்தது அவர் கவனம் தொலைகாட்சியில் இருப்பது. அவர் குடும்பத்தாரோ மரியாதைக்கு இரண்டு வார்த்தை பேசி விட்டு நானாச்சி என் நண்பனாச்சி என்று சீரியல் பார்த்துகொண்டுருந்தனர். அவர்கள் பார்வை உபசரிப்பு எல்லாம் விளம்பர இடைவெளியின் போது மட்டும் என் பாக்கம் திரும்பியது. வந்திருக்கும் நபர் என்ன நினைப்பார் என்ற எண்ணம் கூட இல்லை அவர்களுக்கு. ஆண்கள் சீரியல் பார்க்க மாட்டார்கள் எனும் எனது எண்ணத்தை அன்றோடு குழிதோண்டி புதைத்துவிட்டேன்.அன்று  வேறுவழியின்றி இரண்டு மகா மட்டமான சீரியல் பார்க்க நேர்ந்தது . 

எனக்கு என்ன சோகம் என்றால் அவர் என்னை அப்படி வதைத்தும் கடைசி வரை வீட்டை சுற்றிக்காட்டவில்லை என்பது தான. அங்கு இருந்து தப்பித்து வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. இதில் இருந்து நான் கற்றுக்கொண்ட பாடம் இரவு 06.00 மணிக்கு மேல் யார் வீட்டிற்கும் போக கூடாது என்பது தான். யாருக்கு தெரியும் அவர்களும் ஏதேனும் சீரியல் பார்க்கலாம். இப்படி இவர்கள் பார்க்கும் சீரியல்கள் தரமானதுதானா?

தமிழ் சீரியலில் பெருமான்மையான பெண்கள்  கொடுர மனம் கொண்டவர்களாக காட்டப்பட வேண்டும் என எழுதபடாத சட்டம் இருக்கிறதா என தெரியவில்லை. நான் பார்த்த ஒரிரு சீரியலில் பெண்கள் கொடுர மனம் கொண்டவர்களாகவும், சூழ்ச்சி செய்பவர்களாகவும், அடுத்த குடும்பங்களை கெடுக்க நினைப்பவர்களாகவும் தான் அவர்கள் பாத்திரங்கள் படைக்கப்பட்டுள்ளது.

"கூடி வாழ்ந்தால் கோடி நன்மை " என்ற பழமொழி நம்மிடத்தில் தோன்றியதா அல்லது மேலை நாட்டின் இறக்குமதியா என்ற சந்தேகம் இந்த சீரியல்களை பார்த்து போது  எனக்கு தோன்றியது. இந்த சீரியலில் உச்சகட்ட அபத்தங்களாக பெண்கள் கொலை செய்பவர்களாகவும், அடுத்த பெண்ணின் கணவனை மயக்கி தான் வலையில் விழ வைப்பவர்களாகவும் காட்டப்படுவதும் தான். ஆனால் ஆண்கள் நல்லவர்களாக கண்ணியமானவர்களாக  இருக்கிறார்கள் (சினிமாவில் உல்டா). உண்மையில் பெண்கள் இப்படிபட்ட மனம் கொண்டவர்கள்தானா என சநதேகம்படும் அளவிற்கு நம்மை  எண்ண வைத்துவிடுகின்றனர். இதை எல்லாம் யாரும் கண்டித்ததாக தெரியவில்லை.

நகைச்சுவைக்கு என்று தனிதொலைக்காட்சி தமிழில் வந்தபோது நான் எதிர்பார்த்தது நகைச்சுவை நாடகங்கள். ஆனால் சினிமா நகைச்சுவை துணுக்குகளை கொண்டே முழு தொலைக்காட்சியும் இயங்கிகொண்டு இருக்கிறது, இது ஒரு வித சலிப்பை ஏற்படுத்துகின்றது. தமிழில் தரமான நகைச்சுவை நாடகம் இல்லாதது மிக பெரிய குறையே.



இப்போ மேலே உள்ள  தலைப்புக்கு வருவோம். இந்தி சேனல்கள் எற்கனவே பரிட்சியமானவர்களுக்கு தெரிந்திருக்கும், இது ஒரு இந்தி நகைச்சுவை நாடகத்தின் தலைப்பு என்று. தமிழில் இது போன்ற நாடகம் இல்லையென்ற  வருத்தம் எனக்குண்டு. இதில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் அன்பு ,பாசம், சகோதரத்துவம்,குடும்ப உறவுகள்,  பெரியவர்களை மதித்தல், ஒற்றுமையுடன் வாழ்தல் பேன்ற பண்புகளை கொண்டவர்களாக படைக்கப்பட்டுள்ளனர். இந்த நாடகம் SONY SAB இந்தி நகைச்சுவை தொலைக்காட்சியில் இரவு 08.30 மணிக்கும், இதன் மறுஒளிபரப்பு மறுநாள் மதியம் 02.00 மணிக்கும் ஒளிபரப்பபடுகின்றது. மேலும் இதன் பழைய ஏபிசோட்கள் மாலை 05.30 மணி முதல் இரவு 07.30 வரை ஒளிபரப்பபடுகின்றன.


இந்த நாடகம் ரசிக்கும்படி இருக்கிறது ஆனால் கொஞ்சம் இந்தி தெரிந்திருக்க வேண்டியது அவசியம். மொழி தெரியாமல் பார்த்தாலும் நடிகர்களின் முகபாவம் நமக்கு சிரிப்பை வரவைத்தாலும் அவர்களின் dialog deliveryயே அதிக நகைச்சுவை கொண்டதாக இருக்கிறது. நேரம் கிடைக்கும் போது  இந்த நாடத்தை பார்த்து மகிழுங்கள்.


கடல் காற்று வீசும்............

மனிதனின் கடவுள்


திருவிளையாடல் படத்தில் நாகேஷ், சிவாஜி கணேசனிடம் அவர் அறிவை சோதிக்க, கேள்வி மேல் கேள்வி கேட்பார். அதில் ஒரு கேள்வி பிரிக்கமுடியாதது ஏதுவோ? அதற்கு அவர் எதுகையும் மோனையும் என்று பதில் அளிப்பார். ஆனால் என்னை கேட்டால்  மனிதனும் அவன் குணமும் தான் என்று சொல்வேன்.

சிறுவயதில், அது ஏனோ தெரியவில்லை எனக்கும் கடவுளுக்கும் ஒத்துவருவதில்லை (கடவுள் கற்பனையினு அப்போ எனக்கு தெரியாது). கோயிலுக்கு போகும் போது எனக்கு வேண்டி கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எற்பட்டதில்லை ( அப்படி வேண்டி என்னத்தை கொடுக்கப்போறாரு என்ற எண்ணமாக இருக்கலாம்). 

உண்மையில் அந்த வயதில் எனக்கு பிரார்த்தனை மீது ஒரு சலிப்பு இருந்தது. அந்த சலிப்பு எனக்கு கடவுள் நம்பிக்கை முற்றிலும் அற்று போகும் வரை இருந்தது.

 நாங்கள் பத்தாவது பாஸ் செய்திருந்த போது எனது நண்பர்கள் அனைவரும் கோயிலுக்கு சென்றனர், நன்றி கடன் செலுத்துவதற்கு. அவ்களுடன் நானும் சென்றேன். அப்பொழுது கோயிலை சுற்றி வரும் போது கோயிலின் பின்புறம் என்னை தவிற மற்றவர்கள் அனைவரும் தங்களுடைய ரோல் நம்பரை எழுதி வைத்திருந்தனர் என்பதை அறிந்த போது எனக்கு ஆச்சர்யமாகவும் கவலையாகவும் இருந்தது. அட! இப்படியெல்லாம் பிரார்த்தனை செய்யலாம் என்று தெரிந்திருந்தால் நாமும் செய்து அதிக மதிப்பெண்ணும் பெற்று இருக்கலாம் என்று எண்ணினேன். ஆனால் கொடுமை என்னவென்றால் எழுதி வைத்திருந்தவர்கள் அனைவரும் என்னைவிட குறைந்த மதிப்பெண்ணே பெற்று இருந்தனர். அதன் பின்பு கடவுளிடம் இருந்து நான் விலகிச்சென்றுவிட்டேன்.

கடவுள் பிரார்த்தனைகளில் எந்த அளவு நான் விலகியிருந்தேனோ, அந்த அளவு மற்றவர்களின் பிரார்த்தனை எனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. எனென்றால் அவர்களிடத்தில் பல முரண்பட்ட செயல்களை நான் பார்க்க நேர்ந்தது.

இப்போது நான் பார்த்த  கடவுள் நம்பிக்கையுடைய நபர்களின் குணத்தை பற்றி சொல்ல போகிறேன். விடுமுறையில் எங்கள் முழுநேர வேலை கிரிகெட் விளையாடுவதுதான் அப்படி விளையாடும் போது ஆகும் செலவுகளை எங்களுக்குள் பிரித்து கொள்வோம். அதில் ஒரு நண்பன் மட்டும் பெரும்பாலும் பணம் தரமாட்டான். ( விளையாடுவதற்கு நண்பர்கள் பற்றா குறையால் யாரும் அவனை வற்புர்த்த மாட்டார்கள்.) அவனுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் அவன் குடும்பமும் அப்படி தான. பிரார்த்தனைக்கு அதிக நேரம் செலவிடுவார்கள். ஒருமுறை அவனிடம் அவன் பங்கை கேட்ட போது வழக்கம்போல் இல்லை என்று மழுப்பினான். நான் கோபத்தில் சாமியல்லாம் நல்லா கூம்பிடுற ஆனா பணம் மட்டும் தர மாட்ர? என்றேன். இரு வருகிறோன் என்று சென்றுவிட்டான். சரி அவனை  சமாதானப்படுத்தி கூட்டிவர நானும் மற்றொரு நண்பனும் சென்றோம். அவன் குடும்பம் சற்று வசதிபடைத்ததுதான் இருந்தும் அவன் தருவதில்லை.நாங்கள் அவன் வீட்டின் அருகில் செல்லும் போது அவன் எங்கள் எதிரில் வந்து  தன் பங்குக்குண்டான பணத்தை தந்தான். ஆனால் ஞாயிற்று கிழமை பிரார்த்தனைக்கு செல்வதற்கு ஆட்டோ முதல் இதர செலவுக்கு அவனிடம் பணம் இருக்கும் என்பது எங்களுக்கும் தெரியும். அவனும் அன்றைக்கு செலவு செய்ய பணத்தை சேமித்து வைக்கவே விரும்புகின்றான் .அதன் பின்பும் பெரும்பாலும் அவன் தன்பங்கை தருவதில்லை. நாங்களும் அதை பொரியதாக எடுத்துகொள்வதில்லை.

எனக்கு தெரிந்த ஒருவர்  ரொம்ப கஞ்சம். தனக்கு கீழ் தற்காலிக பணிபுரிவர்களுக்கு கிடைக்க வேண்டிய சில சலுகைகளை கூட தானே எடுத்துக்கொள்வார். அவர் மிகுந்த கடவுள் பக்தர். ஒருமுறை எங்களை அவர் வீட்டு புஜைக்கு அழைத்த போது வேறு வழியின்றி செல்ல வேண்டி இருந்தது.  நானும் பரவாயில்லை இப்படியாவது செலவு செய்கின்றாறே என்று எண்ணிணேன். அவர் வீட்டுக்கு சென்ற பின்புதான் தெரிந்தது நான் எண்ணியது தவறு என்று. எல்லாம் இரண்டாம்தர பொருட்களால் செய்த பிரசாத சாப்பாடுகள். சிக்கனமாக இவ்வளவு பெரிய புஜையை செய்ததாக பெறுமையும் அடித்துக்கொண்டார். 

அடுத்து, என்னுடைய உயர் அதிகாரி ஒருவர் எப்பொழுதும் பந்தாவாக சுற்றி திரிவார். அவரை கண்டு அனைவரும் பயப்பட வேண்டும் என்று எண்ணுவார். தான் உயர் அதிகாரி என்ற எண்ணத்தால் யாரிடமும் நட்பாக கூட பழக மாட்டார். தன் அதிகாரத்தையும் பந்தாவையும் தன் தோள் மீது சுமப்பார். அவரை கோயிலில் பார்த்த போது அதே பாந்தாவுடன் சாமி கும்பிட்டார். சாமி கும்பிடுவதிலும் ஒரு பந்தாவை வைத்திருந்தார். கடவுளையும் தனுக்கு கீழ் பணிபுரியும் ஊழியராக நினைத்துவிட்டாரோ! என்னவோ. அலுவலகத்திலும் இங்கும் அவருக்கு எந்த வித்தியாசமும் இல்லை.

மற்றோரு சக ஊழியர் அவர் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம். உண்மையில் அவருக்கு அலுவலகத்தின் அனைத்து வேலைகளும் அத்துப்படி. அவரிடம் ஏதேனும் சந்தேகங்களை கேட்கும் போது அவர் அவ்வளவு சீக்கிரமாக சொல்லி தர மட்டார். ஒர் இரு நாட்கள் அவர் பின்னாடி அலைந்தால் தான் சொல்லித்தருவார். அதற்குள் நமது தாவு தீர்ந்துவிடும். அதன் பின்பும் அவரிடம் அதே பவ்யமாக நடந்துகொள்ள வேண்டும் இல்லையென்றால் அடுத்த முறை முற்றிலுமாக எந்த உதவியும் செய்ய மாட்டார். உடனே சொல்லி தந்தால் அவரின் மதிப்பு அடிபட்டு போகும் என்ற அவரின் எண்ணம் தான் என்பதை தெரிந்துகொண்டேன். அவரும் மிக சிறந்த கடவுள் பக்தர். மாலையில் குளித்து புஜை செய்யாமல் எந்த வேலையும் செய்ய மாட்டார். அவரின் கடவுள் பக்தியை அறிந்துகொண்ட சக ஊழியர்கள் அவருக்கு அந்த கோயில் பிராசாதம், இந்த கோயில் பிராசாதம் என்று எதையாவது கொடுத்து அவரிடம் நல்ல பெயர் எடுக்க முயற்ச்சி செய்துகொண்டு இருந்தார்கள்.

என்னை பொறுத்தவரை கடவுளை வணங்குபவர்களுக்கு, எந்த தனி சிறப்பு மிக்க பண்புகள்  இருப்பதாக தெரியவில்லை.  கடவுளை வணங்குபவர்கள் எந்த விதத்திலும் கடவுளுக்காக தங்களை மாற்றிகொள்வதில்லை. மேலும் அவர்கள் பழிபாவத்திற்கு அஞ்சுவார்கள், யாருக்கும் தீங்கு செய்யமாட்டார்கள் என்பதெல்லாம் முற்றிலும் உண்மையில்லை. சாமி கும்பிடாதவனை விட சாமி கும்பிட்ரவன் தான் அதிக தவறுகள் செய்கின்றான. இதற்கு உதாரணமாக காஞ்சிபுரத்தில் உள்ள கோயில் கருவரையில் தனது மன்மத லீலைகளை செய்த குருக்களையும், நடிகையுடன் ஊல்லாசமாக இருந்த சாமியாரையும் கூறலாம். இவர்கள்  அனைவரும் தங்கள் குணத்திற்கு ஏற்றார் போல் கடவுளை adjust செய்துகொள்வார்கள் என்பதே உண்மை.



கடல் காற்று வீசும்............