Wednesday 17 July 2013

Talaash - இந்தி பட விமர்சனம்

தமிழ் படங்களை பார்த்து பார்த்து போர் அடித்ததால் ஒரு மாற்றத்திற்கு மற்ற மொழி படங்களை பார்ப்பது வழக்கம் (டிவியில் தான்). இந்தியாவில் இந்தி படங்கள் தான் மிக பெரிய வியாபார தளமாக உள்ளது. பொதுவாக தமிழ் படங்களை விட இந்தி படங்கள் தரத்தில் முதன்மையாக உள்ளது என்பதனை கசப்புடன் ஒத்துக்கொள்ள வேண்டும்.


அமீர் கானின் படம் என்றாலே எனக்கு ஒருவித ஈர்ப்பு வருகிறது ( லகான்னுக்கு பிறகு ) உண்மையில் இப்படத்திலும் தன்னுடைய நடிப்பால் இதை மீண்டும் நிருப்பித்திருக்கின்றார். தமிழில் பொதுவாக பெரிய நடிகர் படங்களில் அதிக முக்கியத்துவம் அந்த நடிகருக்கே கொடுக்கப்படும் மற்றும் அதிக காட்சிகள் அவரை சுற்றியே செல்லும். பெருன்பான்மையாக அவரை முன்னிருத்தியே படம் செல்லும். துணை நடிகர்களுக்கு அவ்வளவாக முக்கியத்தும் கொடுக்க மாட்டார்கள். ஆனால் நிறைய இந்தி படங்களில அவ்வாறு இருப்பதில்லை. இங்கு ஒவ்வொரு நடிகருக்கும் கதைக்கு தேவையான அளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள், நன்கும் பயன்படுத்திகொள்கிறார்கள். நிறைய இந்தி படங்களில் கதாநாயகிக்கு கதாநாயகனுக்கு நிகராக முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள். இந்த படத்திலும் அமீர் கானுக்கு நிகராக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அமீர் கான்  தன்னுடைய ஆர்பாட்டமில்லா நடிப்பால் நம்மை வியக்க வைக்கிறார். இனி கதைக்குள் செல்வோம்.

முதல் காட்சியே நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கின்றது. கடற்கறை ஓரமாக உள்ள அந்த சாலையில் செல்லும் கார் தீடீரென விபத்துக்குள்ளாகி பாதை மாறி கடலில் விழுவதை பார்க்கும் போதே த்ரில்லிங்கை நாம் அனுபவிக்க ஆரம்பித்துவிடுகின்றோம். இந்த விபத்தை துப்பறியும் பொருப்பை எற்கிறார் இன்ஸ்பெக்டர் அமீர். விபத்திற்குள்ளாகும்  காரை கடலில் இருந்து கிரென் முலம் வெளியே எடுத்து பார்த்தால் ஒரு பிரபல நடிகர் இறந்து கிடக்கிறார். அவர் குடித்துவிட்டு வண்டி ஒட்டவில்லை மற்றும் அவருடன் யாரும் பயணம் செய்யவில்லை, வண்டியின் ப்ரேக் முதலியவை நல்ல கண்டிசனில் இருக்கிறது. சாலையில் அந்த நேரத்தில் யாரும் இல்லை மற்றும் அவர் தன்னுடை படபிடிப்பு தளத்தில் இருந்து சென்ற பிறகு இரண்டு மணிநேரம் கழித்து விபத்து நடைப்பெற்று இருக்கிறது.  அந்த நடிகர் தனியாக கார் ஒட்ட விருப்பம் இல்லாதவர், எப்போதும் தன்னுடைய கார் டிரைவருடன் தான் செல்லுவார், அன்று மட்டும் ஏன் தனியாக சென்றார்? போன்ற கேள்வியால் அமீர் குழப்பம் அடைகிறார்.


பின் நடிகரின் மனைவியிடம் விசாரணை செய்யும் போது விபத்து நடத்த காலையில் அவர் அதிக பணத்தை கொண்டு சென்றது தெரிய வருகிறது. அந்த பணப்பை காரில் கிடைக்கவில்லை. இதன் அடிப்படையில் விசாரணை செல்லுகிறது. பின்னர் இந்த பணம் விபாச்சார புரோக்கர் ஒருவனுக்கு கொடுக்க எடுத்து செல்லப்பட்டது என்பதையும், அவன் இந்த நடிகரை முன்று வருடமாக ப்ளாக்மெயில் செய்து கொண்டுருப்பதை அறிந்த அமீர். விபச்சார விடுதிக்கு சென்று விசாரணையை மேற்கெள்ளும் போது அவன் சொந்த ஊருக்கு ஓடிவிட்டது தெரிய வருகிறது. இந்த விசாரணையின் போது தான் விபச்சாரியான கரீனா கபுர் அமீரை சந்திக்கிறாள் (கவனிக்கவும் அமீர் சந்திக்கவில்லை).




கரீனா கபுர் விசாரணைக்கு அவருக்கு உதவி செய்கிறார். விசாரணையின் போது அமீர் இரவு முழுவதும்  கரீனா கபுருடன் சுற்றி திரிகின்றார். இதற்கு விசாரணை மட்டும் காரணமல்ல சில வருடங்களுக்கு முன் தன் மகனை ஒரு ஏரியில் நடத்த விபத்தில் இழக்கிறார் (தண்ணீரில்  முழ்கி மகன் இறந்துவிடுகிறான் ). இதற்கு தன்னுடைய அஜாக்கிரத்தை தான் காரணம் என்ற குற்ற உணர்ச்சியால் இரவில் துக்கமில்லாமல் சுற்றி திரிகின்றார். இதனிடையில் தன் மனைவி ராணி முகர்ஜி ஆவிகளுடன் பேசும் பெண்மணி முலம் இறந்த தன்னுடை மகனுடன் பேசுகிறாள். இதனை அறியும் அமீர் இது முட்டாள் தனமானது என்று தன் மனைவியை கண்டிக்கின்றார். ஆனால் தனக்கு இதில் தான் நிம்மதி இருப்பதாக செல்லி தன் தோழியின் வீட்டிற்கு சென்று விடுகின்றாள். இதனால் அதிக மன உளைச்சலுக்கு அளாகிறார். பின் கிளைமாக்ஸில்  அமீர் கரீனா கபுரின் உதவியால் விபத்திற்கு காரணத்தை கண்டுபிடிக்கும் போது தான் அனைத்தும் அவருக்கு புலப்படுகிறது (நமக்கும் தான், அட போங்கட நீங்களும் உங்க சீனிமாவும்).


கரீனா கபுர் தேவையில்லாம் இதில் திணிக்கப்பட்டதாக அரம்பத்தில் அனைவருக்கும் தோன்றும். ஆனால் அவரின் கதாபாத்திரத்தின் அழுத்தம் படத்தின் முடிவில் தான் தெரிகின்றது. ராணி முகர்ஜியும் கரீனா கபுரும் தங்கள் நடிப்பை அழகாக பதிவு செய்திருக்கிறார்கள்.

அமீர் கானை பற்றி சொல்ல வேண்டும் எனில் அவர் மிக பெரிய நடிகர் எனினும் ஒரு சண்டை காட்சி கூட இல்லாமல் கதைக்கு தேவையான அளவிற்கு மட்டும் நடித்திருப்பது பிற நடிகர்கள் கற்க வேண்டிய பாடம். 

 இந்த படத்தில் என்னை அதிகம் ரசிக்க வைத்தது துணை நடிகர்களின் நடிப்பு குறிப்பாக புரோக்கருக்கு ஏடுபிடி வேலை செய்யும் அந்த நபரின் நடிப்பும் அவருக்கும்  விலைமாதுவிற்கும் இடையே இருக்கும் காதலை அழகாக பதிவு செய்திருக்கிறார்கள். அந்த விலைமாதுவின் பாத்திரப்படைப்பு அவளின் வலியை உணர செய்கிறது (கதாநாயகியை விட) .

இப்படத்தில் சில லாஜிக் சருக்கல்கள் இருக்கிறது. உதாரணமாக புரோக்கர் தன்னுடைய சிம் கார்டை மாற்றும் போது அதை உடைக்காமல் துக்கிப்போடுவது ஏன்? நாம சின்ன துண்டு சீட்டையே சுக்குநுறாக கிழிக்கும் போது அந்த சிம் கார்டால் தனக்கு அபத்து வரும் என தெரிந்தும் அதை அப்படியே துக்கி போடுவார்களா? அதை யாராவது எடுத்து பயன்படுத்துவார்கள் என்ற சிறு அறிவு கூடவா இல்லாமல் இருக்கும். மற்றொன்று புரோக்கரிடம் ஏடுபிடி வேலை செய்யும் அந்த கால் ஊனமுற்ற நபர் இறந்த நடிகரின் நண்பனிடம் இருந்து ப்ளாக்மெயில் முலம் வாங்கிய பணப்பையும் அவனுடன் ஓடி செல்ல வரும் விலைமாதுவும் ஒரே கலரில் பேக் வைத்திருப்பது எப்படி? போன்றவைகளை சொல்லலாம்.

பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் படி இருக்கின்றது குறிப்பாக டைட்டில் சாங்க் மிக இனிமையாக இருக்கிறது. பல முறை கேட்டு ரசிக்கலாம்.  இதன் கிளைமாக்ஸ் எனக்கு உடன் பாடு இல்லை என்றாலும் ரசித்தேன். 

சஸ்பேன்ஸ் த்ரில்லர் ரசிப்பவர்களை கண்டிப்பாக ஏமாற்றாது இந்த படம். 
ஒரு முறை பார்த்து ரசிக்கலாம்.

No comments:

Post a Comment