Showing posts with label மனிதனின் கடவுள். Show all posts
Showing posts with label மனிதனின் கடவுள். Show all posts

Saturday, 18 May 2013

மனிதனின் கடவுள்


திருவிளையாடல் படத்தில் நாகேஷ், சிவாஜி கணேசனிடம் அவர் அறிவை சோதிக்க, கேள்வி மேல் கேள்வி கேட்பார். அதில் ஒரு கேள்வி பிரிக்கமுடியாதது ஏதுவோ? அதற்கு அவர் எதுகையும் மோனையும் என்று பதில் அளிப்பார். ஆனால் என்னை கேட்டால்  மனிதனும் அவன் குணமும் தான் என்று சொல்வேன்.

சிறுவயதில், அது ஏனோ தெரியவில்லை எனக்கும் கடவுளுக்கும் ஒத்துவருவதில்லை (கடவுள் கற்பனையினு அப்போ எனக்கு தெரியாது). கோயிலுக்கு போகும் போது எனக்கு வேண்டி கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எற்பட்டதில்லை ( அப்படி வேண்டி என்னத்தை கொடுக்கப்போறாரு என்ற எண்ணமாக இருக்கலாம்). 

உண்மையில் அந்த வயதில் எனக்கு பிரார்த்தனை மீது ஒரு சலிப்பு இருந்தது. அந்த சலிப்பு எனக்கு கடவுள் நம்பிக்கை முற்றிலும் அற்று போகும் வரை இருந்தது.

 நாங்கள் பத்தாவது பாஸ் செய்திருந்த போது எனது நண்பர்கள் அனைவரும் கோயிலுக்கு சென்றனர், நன்றி கடன் செலுத்துவதற்கு. அவ்களுடன் நானும் சென்றேன். அப்பொழுது கோயிலை சுற்றி வரும் போது கோயிலின் பின்புறம் என்னை தவிற மற்றவர்கள் அனைவரும் தங்களுடைய ரோல் நம்பரை எழுதி வைத்திருந்தனர் என்பதை அறிந்த போது எனக்கு ஆச்சர்யமாகவும் கவலையாகவும் இருந்தது. அட! இப்படியெல்லாம் பிரார்த்தனை செய்யலாம் என்று தெரிந்திருந்தால் நாமும் செய்து அதிக மதிப்பெண்ணும் பெற்று இருக்கலாம் என்று எண்ணினேன். ஆனால் கொடுமை என்னவென்றால் எழுதி வைத்திருந்தவர்கள் அனைவரும் என்னைவிட குறைந்த மதிப்பெண்ணே பெற்று இருந்தனர். அதன் பின்பு கடவுளிடம் இருந்து நான் விலகிச்சென்றுவிட்டேன்.

கடவுள் பிரார்த்தனைகளில் எந்த அளவு நான் விலகியிருந்தேனோ, அந்த அளவு மற்றவர்களின் பிரார்த்தனை எனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. எனென்றால் அவர்களிடத்தில் பல முரண்பட்ட செயல்களை நான் பார்க்க நேர்ந்தது.

இப்போது நான் பார்த்த  கடவுள் நம்பிக்கையுடைய நபர்களின் குணத்தை பற்றி சொல்ல போகிறேன். விடுமுறையில் எங்கள் முழுநேர வேலை கிரிகெட் விளையாடுவதுதான் அப்படி விளையாடும் போது ஆகும் செலவுகளை எங்களுக்குள் பிரித்து கொள்வோம். அதில் ஒரு நண்பன் மட்டும் பெரும்பாலும் பணம் தரமாட்டான். ( விளையாடுவதற்கு நண்பர்கள் பற்றா குறையால் யாரும் அவனை வற்புர்த்த மாட்டார்கள்.) அவனுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் அவன் குடும்பமும் அப்படி தான. பிரார்த்தனைக்கு அதிக நேரம் செலவிடுவார்கள். ஒருமுறை அவனிடம் அவன் பங்கை கேட்ட போது வழக்கம்போல் இல்லை என்று மழுப்பினான். நான் கோபத்தில் சாமியல்லாம் நல்லா கூம்பிடுற ஆனா பணம் மட்டும் தர மாட்ர? என்றேன். இரு வருகிறோன் என்று சென்றுவிட்டான். சரி அவனை  சமாதானப்படுத்தி கூட்டிவர நானும் மற்றொரு நண்பனும் சென்றோம். அவன் குடும்பம் சற்று வசதிபடைத்ததுதான் இருந்தும் அவன் தருவதில்லை.நாங்கள் அவன் வீட்டின் அருகில் செல்லும் போது அவன் எங்கள் எதிரில் வந்து  தன் பங்குக்குண்டான பணத்தை தந்தான். ஆனால் ஞாயிற்று கிழமை பிரார்த்தனைக்கு செல்வதற்கு ஆட்டோ முதல் இதர செலவுக்கு அவனிடம் பணம் இருக்கும் என்பது எங்களுக்கும் தெரியும். அவனும் அன்றைக்கு செலவு செய்ய பணத்தை சேமித்து வைக்கவே விரும்புகின்றான் .அதன் பின்பும் பெரும்பாலும் அவன் தன்பங்கை தருவதில்லை. நாங்களும் அதை பொரியதாக எடுத்துகொள்வதில்லை.

எனக்கு தெரிந்த ஒருவர்  ரொம்ப கஞ்சம். தனக்கு கீழ் தற்காலிக பணிபுரிவர்களுக்கு கிடைக்க வேண்டிய சில சலுகைகளை கூட தானே எடுத்துக்கொள்வார். அவர் மிகுந்த கடவுள் பக்தர். ஒருமுறை எங்களை அவர் வீட்டு புஜைக்கு அழைத்த போது வேறு வழியின்றி செல்ல வேண்டி இருந்தது.  நானும் பரவாயில்லை இப்படியாவது செலவு செய்கின்றாறே என்று எண்ணிணேன். அவர் வீட்டுக்கு சென்ற பின்புதான் தெரிந்தது நான் எண்ணியது தவறு என்று. எல்லாம் இரண்டாம்தர பொருட்களால் செய்த பிரசாத சாப்பாடுகள். சிக்கனமாக இவ்வளவு பெரிய புஜையை செய்ததாக பெறுமையும் அடித்துக்கொண்டார். 

அடுத்து, என்னுடைய உயர் அதிகாரி ஒருவர் எப்பொழுதும் பந்தாவாக சுற்றி திரிவார். அவரை கண்டு அனைவரும் பயப்பட வேண்டும் என்று எண்ணுவார். தான் உயர் அதிகாரி என்ற எண்ணத்தால் யாரிடமும் நட்பாக கூட பழக மாட்டார். தன் அதிகாரத்தையும் பந்தாவையும் தன் தோள் மீது சுமப்பார். அவரை கோயிலில் பார்த்த போது அதே பாந்தாவுடன் சாமி கும்பிட்டார். சாமி கும்பிடுவதிலும் ஒரு பந்தாவை வைத்திருந்தார். கடவுளையும் தனுக்கு கீழ் பணிபுரியும் ஊழியராக நினைத்துவிட்டாரோ! என்னவோ. அலுவலகத்திலும் இங்கும் அவருக்கு எந்த வித்தியாசமும் இல்லை.

மற்றோரு சக ஊழியர் அவர் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம். உண்மையில் அவருக்கு அலுவலகத்தின் அனைத்து வேலைகளும் அத்துப்படி. அவரிடம் ஏதேனும் சந்தேகங்களை கேட்கும் போது அவர் அவ்வளவு சீக்கிரமாக சொல்லி தர மட்டார். ஒர் இரு நாட்கள் அவர் பின்னாடி அலைந்தால் தான் சொல்லித்தருவார். அதற்குள் நமது தாவு தீர்ந்துவிடும். அதன் பின்பும் அவரிடம் அதே பவ்யமாக நடந்துகொள்ள வேண்டும் இல்லையென்றால் அடுத்த முறை முற்றிலுமாக எந்த உதவியும் செய்ய மாட்டார். உடனே சொல்லி தந்தால் அவரின் மதிப்பு அடிபட்டு போகும் என்ற அவரின் எண்ணம் தான் என்பதை தெரிந்துகொண்டேன். அவரும் மிக சிறந்த கடவுள் பக்தர். மாலையில் குளித்து புஜை செய்யாமல் எந்த வேலையும் செய்ய மாட்டார். அவரின் கடவுள் பக்தியை அறிந்துகொண்ட சக ஊழியர்கள் அவருக்கு அந்த கோயில் பிராசாதம், இந்த கோயில் பிராசாதம் என்று எதையாவது கொடுத்து அவரிடம் நல்ல பெயர் எடுக்க முயற்ச்சி செய்துகொண்டு இருந்தார்கள்.

என்னை பொறுத்தவரை கடவுளை வணங்குபவர்களுக்கு, எந்த தனி சிறப்பு மிக்க பண்புகள்  இருப்பதாக தெரியவில்லை.  கடவுளை வணங்குபவர்கள் எந்த விதத்திலும் கடவுளுக்காக தங்களை மாற்றிகொள்வதில்லை. மேலும் அவர்கள் பழிபாவத்திற்கு அஞ்சுவார்கள், யாருக்கும் தீங்கு செய்யமாட்டார்கள் என்பதெல்லாம் முற்றிலும் உண்மையில்லை. சாமி கும்பிடாதவனை விட சாமி கும்பிட்ரவன் தான் அதிக தவறுகள் செய்கின்றான. இதற்கு உதாரணமாக காஞ்சிபுரத்தில் உள்ள கோயில் கருவரையில் தனது மன்மத லீலைகளை செய்த குருக்களையும், நடிகையுடன் ஊல்லாசமாக இருந்த சாமியாரையும் கூறலாம். இவர்கள்  அனைவரும் தங்கள் குணத்திற்கு ஏற்றார் போல் கடவுளை adjust செய்துகொள்வார்கள் என்பதே உண்மை.



கடல் காற்று வீசும்............