Monday 22 July 2013

தாகத்தை தீர்த்த கானல்நீர் - உரைநடை கவிதை



விடியும் வரை காத்திருந்தும்,
அலைபேசியில் அழைப்பில்லை
குறுச்செய்தியுமில்லை...

இதயத்தின் வலியாக உருமாறியது
இந்த காத்திருப்பு...

வேதனையில் அணுஅணுவாக
நான் துடிக்க, காலம் ஆயிரம்
ஊசிகளால் நொடிக்கொருதரம்
 துளைத் தெடுக்கிறது..

நேற்றுவரை இன்பத்தை தந்த உறவு
இப்பொழுது ஓவ்வொரு நொடியும் 
மரண  வேதனையை தருகிறது...

காதலுடன் வழங்கிய முத்தமும்,
பெறப்பட்ட முத்தங்களும் 
காமமாக தேன்றுகிறது

முதல் முறையாக எதோ தவறு 
செய்த உணர்வும்,கழிவிரக்கவும் 
என்னை ஆட்கொள்கிறது...

இனி நெஞ்சுறுதி துளியும்
இல்லை என் 
தனித்தன்மையை மீட்டெடுக்க... 

பசியற்ற உடலையும், வேதனையில் 
கலையிழந்த முகத்தையும்
இனி  மறைக்க முடியாது...

இருவர் மட்டும் இருக்கும் போது 
உறுதியாக இருந்த காதல்...

உறவினர்களிடமும்,
சமூகத்திடமும் வரும் போது
உடைந்து நிறம் மாறுகிறது...

காதலின் இன்பத்தை விட
வெறுமையான தனிமையே மேல்
என ஏன் தோன்றாமல் போனது?

உள்ளமும், புறமும் வெந்துபோய்
கிடக்கையில், அவலமும்
இயலாமையும் தான் மிஞ்சுகிறது...

அலுவலகத்தில் எளனமாக
பார்த்த பார்வைகளுக்கு
பதில் சொல்ல முடியாது..

சற்று கண்ணையர்ந்து
வேதனையில் முனங்கிகொண்டிருக்க

அழைப்புமணி ஒலிக்கிறது....

பிரமை என நினைக்கையில் மீண்டும்
ஒலிக்கிறது விடாமல்...!

உயிரற்ற உடலையை போல்
கணத்த இதயத்துடன்
நடத்து செல்கிறேன் கதவை நோக்கி...

பால்காரியோ, போப்பர் பையனோ
பதில் தந்து அனுப்பிவிட வேண்டும்
என் நிலையை அறியும் முன்...

கதவை திறந்து பார்க்கையில், ஆயிரம்
வேதனை தந்துகொண்டுருப்பவன்
நிற்கிறான்...

அறையலாமா அல்லது கட்டியணைத்து
அழலாமா...!

செய்வதரியாமல் நிற்கிறேன் மரம் போல்...

கண்டேன் சீதையை என்ற
அனுமானை போல்
"11 மணிக்கு நமக்கு திருமணம்" என்கிறான்...

ஒருநொடி அமைதிக்கு பின் "எனக்கு
ரவி சார், உனக்கு சாருலதா மேடமும்
சாட்சி கையெழுத்து போடுவார்கள்"
என சொல்லி
மனநிறைவுடன் சிரிக்கிறான்...

துடிக்க வைத்த வேதனை அனைத்தும்
அழுகையாக பீரிட, அவனை கட்டியணைத்து
இருக்கினேன் என் பலம் கொண்டு...

விம்பும் என் மார்பகம் அவன்
நெஞ்சையழுத்த,
நிலைதடுமாறி கதவில் சாய்ந்தோம்
சத்தத்துடன்...

"ஏய் லூசு, குழந்தை எழ போகுது"
"எழுந்தா என்ன"
"எழுந்தா இனி அங்கிள் இல்லை
அப்பானு செல்லு" என்று உச்ச முகர்ந்தான்...

சிவந்த கண்களிலிருந்து
துளிர்த்தது ஆனந்த கண்ணீர்
இருவரிடமும்...

இனி பொய் முகமுடி போட்டு
திரிபவர்களின் பேச்சை
பற்றி கவலையில்லை
எங்களுக்கு...

********



கடல் காற்று வீசும்........

No comments:

Post a Comment