Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Wednesday, 24 July 2013

குட்டி தேவதை - கவிதை


அழகிற்கே அழகு சேர்க்கும் இரண்டு
வயது குட்டி தேவதை என் தங்கை...

சின்னச்சிறு கைகளால் என்னை 
அடிக்கும் போதும்
என் புத்தகங்களை கலைக்கும் போதும்
எனக்கு கோபமே எற்பட்டதில்லை...

அப்பாவின் அயர்ன் செய்த சட்டையை 
கலைக்கும் போதும்
அவர் கைபேசியில் விளையாடும் போதும்
அப்பாவின் கோபம் அம்மாவிடம்...

பூஜையறையில் கட்டுப்பாடு 
எனக்கு மட்டுமே...!

மழலை குரலில் அவள் பாடும் கானம்
வீடெங்கும் எதிரொலிக்கும்...

அவளின் ஒவ்வொரு அசைவையும் 
பார்த்து பார்த்து
மகிழ்ந்தோம் நித்தம் நித்தம்...

ஒவ்வொரு முறையும் பள்ளிவிட்டு 
வரும் போது
மகிழ்ச்சி பொங்க ஒடிவந்து
கட்டி அணைப்பாள்...

ஒடிபிடித்து, மறைந்து நின்று, பூச்சாண்டி காட்டி
விளையாடியது அனைத்தும் 
நின்றது ஒரு நாள்...

காய்ச்சலில் அவள் விழும் போது
லேசான காய்ச்சல் என நினைத்தோம்...

ஆனால் காய்ச்சல் நிற்காததால்
செய்வதறியாமல் தவித்தோம்...

உற்றார் உறவினர், நண்பர்களின் பரிந்துரையில்
டாக்டர்கள் மாறினார்கள் ஆனால்
காய்ச்சல் மறையவில்லை...

ஊசிகளும், மாத்திரை, மருந்துகளும்
அவளை நிலைகுலைய செய்து
நிறம் மாற செய்தன...

முருகன், சிவன், ஐயப்பன் என
அனைத்து கோயிலுக்கும் சென்று வேண்டி
தீறுநீரு பூசுகிறால் அம்மா...

பீட்டர் அண்ணாவுடன் சர்ச்சில்
பிரார்த்தனையும்...
பானு அக்காவுடன் தர்காவில் தாயித்தும்...
கட்டி வேண்டிக்கொண்டார்கள்...
அவளை மீட்டெடுக்க...

அனைத்து கடவுளிடமும் உள்ளம்
உருகி வேண்டிக்கொண்டும்
காய்ச்சலின் வீரியம் மட்டும்
குறையவில்லை...

இரவில் அவளின் வலியின் முனங்கல்கள்
என் உயிரை உறைய செய்தது...

காது பொத்தி தலையணையில் முகம் 
புதைத்தேன் கேட்க முடியாமல்...

ஒருநாள்...
பள்ளியிலிருந்து என்னை 
அழைக்க வந்தார் பீட்டர் அண்ணா...
வீட்டிற்கு வருமுன்னே சோகம் 
என்னை கவ்வியது...

உள்நுழைந்து அன்னையிடம் 
செல்லும் போது...

முகம் மட்டும் தெரிய துணியால்
சுற்றப்பட்டு விட்டின் நடுவில்
கிடத்தப்பட்டு இருக்கின்றாள் என் தங்கை...

புத்தகப்பையை கழட்டும் முன்பே 
கட்டியணைத்து  கதறினால் அன்னை...

என்னையறியாமல் அழுகை பீரிட்டது...

மாலையில் அன்னையின் கதறலோடு
எடுத்து செல்லப்பட்டாள்...
புதைப்பதற்காக...

இரவில் தலைசாய்ந்து யார் மடியிலோ
தூங்கிப்போனேன்...

கனவுகள் என் தூக்கத்தை கலைக்க
கண்மூடி கிடந்தேன்...

பின்னிறவில் நான் மட்டும்
பூஜையறையிலிருந்த அனைத்து படங்களையும்
குப்பைதொட்டியில் வீசினேன்...

தங்கச்சி பாப்பாவின் புகைப்படமும்
பொம்மைகளையும் வைப்பதற்கு...
                   

                           ***********




கடல் காற்று வீசும்......

Monday, 22 July 2013

தாகத்தை தீர்த்த கானல்நீர் - உரைநடை கவிதை



விடியும் வரை காத்திருந்தும்,
அலைபேசியில் அழைப்பில்லை
குறுச்செய்தியுமில்லை...

இதயத்தின் வலியாக உருமாறியது
இந்த காத்திருப்பு...

வேதனையில் அணுஅணுவாக
நான் துடிக்க, காலம் ஆயிரம்
ஊசிகளால் நொடிக்கொருதரம்
 துளைத் தெடுக்கிறது..

நேற்றுவரை இன்பத்தை தந்த உறவு
இப்பொழுது ஓவ்வொரு நொடியும் 
மரண  வேதனையை தருகிறது...

காதலுடன் வழங்கிய முத்தமும்,
பெறப்பட்ட முத்தங்களும் 
காமமாக தேன்றுகிறது

முதல் முறையாக எதோ தவறு 
செய்த உணர்வும்,கழிவிரக்கவும் 
என்னை ஆட்கொள்கிறது...

இனி நெஞ்சுறுதி துளியும்
இல்லை என் 
தனித்தன்மையை மீட்டெடுக்க... 

பசியற்ற உடலையும், வேதனையில் 
கலையிழந்த முகத்தையும்
இனி  மறைக்க முடியாது...

இருவர் மட்டும் இருக்கும் போது 
உறுதியாக இருந்த காதல்...

உறவினர்களிடமும்,
சமூகத்திடமும் வரும் போது
உடைந்து நிறம் மாறுகிறது...

காதலின் இன்பத்தை விட
வெறுமையான தனிமையே மேல்
என ஏன் தோன்றாமல் போனது?

உள்ளமும், புறமும் வெந்துபோய்
கிடக்கையில், அவலமும்
இயலாமையும் தான் மிஞ்சுகிறது...

அலுவலகத்தில் எளனமாக
பார்த்த பார்வைகளுக்கு
பதில் சொல்ல முடியாது..

சற்று கண்ணையர்ந்து
வேதனையில் முனங்கிகொண்டிருக்க

அழைப்புமணி ஒலிக்கிறது....

பிரமை என நினைக்கையில் மீண்டும்
ஒலிக்கிறது விடாமல்...!

உயிரற்ற உடலையை போல்
கணத்த இதயத்துடன்
நடத்து செல்கிறேன் கதவை நோக்கி...

பால்காரியோ, போப்பர் பையனோ
பதில் தந்து அனுப்பிவிட வேண்டும்
என் நிலையை அறியும் முன்...

கதவை திறந்து பார்க்கையில், ஆயிரம்
வேதனை தந்துகொண்டுருப்பவன்
நிற்கிறான்...

அறையலாமா அல்லது கட்டியணைத்து
அழலாமா...!

செய்வதரியாமல் நிற்கிறேன் மரம் போல்...

கண்டேன் சீதையை என்ற
அனுமானை போல்
"11 மணிக்கு நமக்கு திருமணம்" என்கிறான்...

ஒருநொடி அமைதிக்கு பின் "எனக்கு
ரவி சார், உனக்கு சாருலதா மேடமும்
சாட்சி கையெழுத்து போடுவார்கள்"
என சொல்லி
மனநிறைவுடன் சிரிக்கிறான்...

துடிக்க வைத்த வேதனை அனைத்தும்
அழுகையாக பீரிட, அவனை கட்டியணைத்து
இருக்கினேன் என் பலம் கொண்டு...

விம்பும் என் மார்பகம் அவன்
நெஞ்சையழுத்த,
நிலைதடுமாறி கதவில் சாய்ந்தோம்
சத்தத்துடன்...

"ஏய் லூசு, குழந்தை எழ போகுது"
"எழுந்தா என்ன"
"எழுந்தா இனி அங்கிள் இல்லை
அப்பானு செல்லு" என்று உச்ச முகர்ந்தான்...

சிவந்த கண்களிலிருந்து
துளிர்த்தது ஆனந்த கண்ணீர்
இருவரிடமும்...

இனி பொய் முகமுடி போட்டு
திரிபவர்களின் பேச்சை
பற்றி கவலையில்லை
எங்களுக்கு...

********



கடல் காற்று வீசும்........