Showing posts with label பீகார் துயர செய்தி. Show all posts
Showing posts with label பீகார் துயர செய்தி. Show all posts

Wednesday, 17 July 2013

பீகார் பள்ளியில் நெஞ்சை உருக்கும் துயரம்

பாட்னா, ஜூலை 16-

பீகார் மாநிலம் சரன் மாவட்டம் கர்மசாதி காந்தவான் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் இன்று மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு திடீரென வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட குழந்தைகளை சாப்ராவில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே 11 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த குழந்தைகள் அனைவரும் 8 முதல் 12 வயதுக்கு உட்பட்டவர்கள். 

மேலும் 48 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

குழந்தைகள் சாவுக்கு பள்ளியில் வழங்கப்பட்ட உணவே காரணம் என்று கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த குழந்தைகளின் பெற்றோர், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். 

மாணவர்கள் சாவு தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். மேலும், பலியான குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

- மாலைமலர் செய்தி http://www.maalaimalar.com/2013/07/16190752/bihar-government-school-lunch.html